பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்! - 6 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!
Mar 15, 2026, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்! – 6 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.  தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தகவலைப் பாகிஸ்தானைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். 

பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். அங்கே குண்டுவெடிப்பு சம்பவங்கள் கூட பல முறை நடந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் வலுவாக இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

அப்படியொரு தாக்குதல் தான் மீண்டும் பாகிஸ்தான் நாட்டில் இப்போது நடந்துள்ளது. சீன நாட்டவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தசு என்ற இடத்தில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இதைச் சீன நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்த நிலையில், சீன பொறியாளர்கள் பலரும் அந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களில் சிலர் இஸ்லாமாபாத்தில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தாசு என்ற இடத்திற்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் காரில் பயணித்த சீனாவைச் சேர்ந்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக யதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் முகமது அலி கந்தாபூர் தெரிவித்தார். அவர்களுடன் சென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த கைபர் பக்துன்க்வா போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய கார்களுக்கு பின்னால் சென்ற மற்ற கார்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.  சீனப் பொறியாளர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tags: Suicide attack in Pakistan! - 6 people lost their bodies!
ShareTweetSendShare
Previous Post

திடீர் வெடிச்சத்தம் – அதிர்ந்த வீடுகள் – திடுக்கிட்ட மக்கள் – திருவாரூர் திகில்

Next Post

நாடாளுமன்ற தேர்தல் : 6-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies