நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Nov 16, 2025, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Mar 29, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான்,  ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பதவியேற்பது உறுதி என்ற முடிவை நன்கு அறிந்து, இந்தத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டு கால, காங்கிரஸ், திமுக மற்றும் இருபது, முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பிற மாநிலக் கட்சிகள் அங்கம் வகித்த கூட்டணி அரசு, நமது நாட்டைக் கூறு போட்டு அழித்துக் கொண்டிருந்தன.

வலிமையான பிரதமர் இல்லாமல், அனைத்துத் துறைகளிலும் 2G உள்ளிட்ட ஊழல்கள் மட்டுமே நடைபெற்றன. காங்கிரஸ் திமுக ஆட்சியில், வளர்ச்சியில் நமது நாடு சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் நமது நாடு பெரிதும் வளர்ந்திருக்கிறது.

காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான், ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசு நிதி ஒதுக்கியும் சீரமைக்கப்படாத நமது நொய்யல் நதி, கோவை பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் அன்பைப் பெற்று நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மத்திய அரசின் உதவியோடு முழுவதுமாக மீட்டெடுக்கப்படும். ஒரு வலிமையான பிரதமர் தலைமையில், நமது நாடு வேகமாக வளர்ச்சி பெறும் என்பது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்காக, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக, நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பதை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை தொகுதிகளிலும் உறுதி செய்வோம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இயேசுபிரானின் அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்! – அண்ணாமலை

Next Post

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Related News

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies