நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Apr 29, 2026, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான்,  ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பதவியேற்பது உறுதி என்ற முடிவை நன்கு அறிந்து, இந்தத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டு கால, காங்கிரஸ், திமுக மற்றும் இருபது, முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பிற மாநிலக் கட்சிகள் அங்கம் வகித்த கூட்டணி அரசு, நமது நாட்டைக் கூறு போட்டு அழித்துக் கொண்டிருந்தன.

வலிமையான பிரதமர் இல்லாமல், அனைத்துத் துறைகளிலும் 2G உள்ளிட்ட ஊழல்கள் மட்டுமே நடைபெற்றன. காங்கிரஸ் திமுக ஆட்சியில், வளர்ச்சியில் நமது நாடு சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் நமது நாடு பெரிதும் வளர்ந்திருக்கிறது.

காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான், ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசு நிதி ஒதுக்கியும் சீரமைக்கப்படாத நமது நொய்யல் நதி, கோவை பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் அன்பைப் பெற்று நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மத்திய அரசின் உதவியோடு முழுவதுமாக மீட்டெடுக்கப்படும். ஒரு வலிமையான பிரதமர் தலைமையில், நமது நாடு வேகமாக வளர்ச்சி பெறும் என்பது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்காக, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக, நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பதை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை தொகுதிகளிலும் உறுதி செய்வோம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இயேசுபிரானின் அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்! – அண்ணாமலை

Next Post

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies