நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jul 29, 2026, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான்,  ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பதவியேற்பது உறுதி என்ற முடிவை நன்கு அறிந்து, இந்தத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டு கால, காங்கிரஸ், திமுக மற்றும் இருபது, முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பிற மாநிலக் கட்சிகள் அங்கம் வகித்த கூட்டணி அரசு, நமது நாட்டைக் கூறு போட்டு அழித்துக் கொண்டிருந்தன.

வலிமையான பிரதமர் இல்லாமல், அனைத்துத் துறைகளிலும் 2G உள்ளிட்ட ஊழல்கள் மட்டுமே நடைபெற்றன. காங்கிரஸ் திமுக ஆட்சியில், வளர்ச்சியில் நமது நாடு சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் நமது நாடு பெரிதும் வளர்ந்திருக்கிறது.

காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான், ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசு நிதி ஒதுக்கியும் சீரமைக்கப்படாத நமது நொய்யல் நதி, கோவை பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் அன்பைப் பெற்று நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மத்திய அரசின் உதவியோடு முழுவதுமாக மீட்டெடுக்கப்படும். ஒரு வலிமையான பிரதமர் தலைமையில், நமது நாடு வேகமாக வளர்ச்சி பெறும் என்பது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்காக, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக, நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பதை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை தொகுதிகளிலும் உறுதி செய்வோம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இயேசுபிரானின் அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்! – அண்ணாமலை

Next Post

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies