வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானம்!
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானம்!

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போர் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. முந்தைய தேஜஸ் விமானங்களைக் காட்டிலும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் புதிய வகை விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போர் விமானம் (எல்.சி.ஏ. எம்.கே.1ஏ) பெங்களூரில் நேற்று வானத்தில் பறந்து, பல்வேறு சாகசங்களை அரங்கேற்றியது. முந்தைய தேஜஸ் விமானங்களைக் காட்டிலும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் புதிய வகை விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதியவகை விமானத்தில் அதிநவீன மின்னணு ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போர்புரிவதற்கான புதிய தொழில்நுட்பங்கள், அதிகநவீன தகவல்தொடர்பு சாதனங்கள், கூடுதல் பதில் தாக்குதல் திறனுடன் கூடிய கருவிகள், மேம்படுத்தப்பட்ட பராமரிப்ப அம்சங்களும் புதிய வகை விமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

18 நிமிடங்களுக்கு வானத்தில் பறந்த போர் விமானத்தை ஓய்வுபெற்ற தலைமை சோதனை விமானிக் குழு கேப்டன் கே.சி.வேணுகோபால் செலுத்தினார். விமானத்தின் சோதனை வெற்றி பெற்றதை எச்.ஏ.எல். அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆர்வாரம் செய்து கொண்டாடினர்.

தேஜஸ் போர் விமானத்தை வடிவமைத்து, மேம்படுத்துவதில் எச்.ஏ.எல். சிறப்பான உற்பத்தி சாதனையை புரிந்துள்ளது. இந்த வகை போர் விமானங்களை கொள்முதல் செய்ய எச்.ஏ.எல். நிறுவனத்துடன் இந்திய விமானப் படை 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, புவிசா அரசியல் சூழல் சாதகமாக இல்லாத நிலை ஏற்பட்டது.

எனினும், எல்.சி.ஏ. எம்.கே.1 ஏ வகை தேஜஸ் விமானத்தை வடிவமைத்து, தயாரித்துள்ளது பெரும் சாதனையாகும். இதற்கு ஒத்துழைத்த மத்திய பாதுகாப்புத் துறை, இந்திய விமானப் படை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேஜஸ் எல்.சி.ஏ.எம்.கே.1ஏ போர் விமானம் வெகுவிரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். எச்.ஏ.எல். நிறுவனத்தின் 3 உற்பத்தி மையங்களில் இந்த வகை விமானங்களை விரைவாக தயாரித்து தருவோம் என எச்.ஏ.எல். நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் சி.பி.அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: Tejas light fighter jet successfully tested!
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் சதமடித்த வெயில்: தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் சொல்வது என்ன?

Next Post

கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் : தேவகவுடா உறுதி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies