2024 ஐபிஎல் தொடரில் தோனி எப்போது பேட்டிங் செய்வார்?
Jan 14, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் தொடரில் தோனி எப்போது பேட்டிங் செய்வார்?

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மஹேந்திரா சிங் தோனி தனது கேப்டன் பதவியை வளர்ந்து வரும் வீரரான ருதராஜ்-யிடம் கொடுத்தார்.

இதனால் சற்று சோகத்தில் இருந்த ரசிகர்கள் அவர் கேப்டன்சி பார்க்கவில்லை என்றாலும் கூட அவரின் பேட்டிங்கை பார்க்கலாம் என்று மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோனி பேட்டிங் செய்ய இறங்கவில்லை. அதற்கு காரணம் அவர் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

இம்பாக்ட் வீரர் விதியால் சிவம் துபே கூடுதல் பேட்ஸ்மேனாக களமிறங்குவதால் தோனி தனது வழக்கமான ஏழாவது இடத்தில் இருந்து இன்னும் பின்னே சென்று எட்டாவது இடத்திற்கு சென்றிருக்கிறார்.

என்னதான் எட்டாவது வரிசை என்றாலும் சில போட்டிகளில் அவரை முன்னே பேட்டிங் செய்ய அனுப்பலாம் என சிஎஸ்கே நிர்வாகம் நினைத்தாலும், தோனி அந்த விஷயத்தில் கறாராக இருக்கிறார் என்கிறார்கள்.
தற்போது சிஎஸ்கே அணி அதிரடி பேட்டிங்கிற்கு மாறி இருக்கிறது.

ஒவ்வொரு வீரரும் 150 ஸ்ட்ரைக் ரேட்டை எளிதாக தொட்டு விடுகிறார்கள். ரச்சின் ரவீந்திரா இதுவரை தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 200-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஜடேஜா பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 200-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி தனது முதல் ஐபிஎல் போட்டியில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதிரடியில் முத்திரை பதித்து இருக்கிறார்.

இப்படி சிஎஸ்கே வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கும் போது தான் அதை கெடுக்கும் வகையில் இடையே சென்று பேட்டிங் ஆடப் போவதில்லை என்ற எண்ணத்தில் தோனி பேட்டிங் வரிசையில் முன்னிலையில் களமிறங்கவில்லை.

இந்த ஆண்டு சிஎஸ்கே அணி விரைவாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் லீக் சுற்றின் கடைசி சில போட்டிகளில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற தோனி சில போட்டிகளில் பேட்டிங் செய்வார்.ஆனால், அதுவும் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை பொறுத்தே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: ms dhoni cricketWhen will Dhoni bat in IPL 2024?
ShareTweetSendShare
Previous Post

 சி-விஜில் செயலியில் 79,000 விதிமீறல் புகார்கள் பதிவு! – தேர்தல் ஆணையம்

Next Post

திமுக மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் : பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies