ஆனைமலை - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் : கோவை தொகுதி பிரச்சாரத்தில் அண்ணாமலை உறுதி!
Sep 6, 2025, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் : கோவை தொகுதி பிரச்சாரத்தில் அண்ணாமலை உறுதி!

Web Desk by Web Desk
Mar 31, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் ஆனைமலை – நல்லாறு திட்டம்  செயல்படுத்தப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளளார்.

இன்றைய தினம், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருப்பூர் மாவட்டம், மாதப்பூர், பொங்கலூர், காட்டூர், வளையபாளையம் பகுதிகளில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மாதப்பூர், பொங்கலூர், காட்டூர், வளையபாளையம் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி பதவி ஏற்பது உறுதி.

நமது பிரதமர் அவர்களை, நமது கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, ஏப்ரல் 19 அன்று நடைபெறும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், போட்டியிடும் பாஜக தொண்டனான அண்ணாமலை ஆகிய எனக்கு, தாமரை சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது பிரதமர் மோடி  அவர்களை பயன்படுத்தி, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் மக்களுக்குத்  தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவேன்.

மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி  உறுப்பினரான நூறு நாட்களில், பல்லடம் சட்டமன்றத் தொகுதியில், ஐந்து இடங்களில்,  தரமான மருந்துகளை, மலிவு விலையில் வழங்கும் மக்கள் மருந்தகங்கள் கொண்டு  வரப்படும்.

பல்லடம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு,  அவற்றிலிருந்து, குழாய் மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுப்போம். கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில், 500 இடங்களில், இ-சேவை மையங்கள் அமைக்கப்படும்.
கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகளுக்கான தீர்வுகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

உலகத் தரமான, கட்டணமற்ற கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகள் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பெயரில், தமிழகத்தில் நிச்சயம் கொண்டு வரப்படும். தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக திமுக நடத்தும் எதிர்ப்பு நாடகங்களை முறியடித்து, முதல் நவோதயா பள்ளி, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்குக் கொண்டு வருவோம்.

இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் வீணாகாமல் பாதுகாக்கவும், சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தப் பகுதியில், குற்றங்கள் அதிகமாக இருப்பதால், புறக்காவல் நிலையங்கள் வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருக்கிறது. எனவே புறக்காவல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

1958 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு தீரும். இதற்குத் தேவைப்படும், 10,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற்று, நிச்சயம் நிறைவேற்றுவோம்.

தொகுதியில், கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு, மத்திய அரசின் மோடி வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். வளையபாளையத்தில் மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதியை எடுத்து சமூகக்கூடம் அமைக்க திமுக முயற்சி செய்தது. அந்த நிதியை மீட்டு, மருத்துவமனை அமைத்துத் தரப்படும்.

ஒவ்வொரு கிராமத்திலும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக, வெற்றி பெற்ற நூறு நாட்களில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கொண்டு வந்த கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், ஒவ்வொரு கிராமங்களிலும், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.

வளையபாளையத்தில், 35 ஆண்டுகளாக பிரச்சினையில் இருக்கும் திரௌபதியம்மன் ஆலயத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் வழிபட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நடைபெற இருப்பது மாநிலத்துக்கான தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ அல்ல. நாட்டிற்கான தேர்தல். பிற கட்சிகளுக்கு வாக்களிப்பதால், எந்தப் பலனும் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. தமிழக இளைஞர்கள், தமிழக அரசியலில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, பாரதப் பிரதமர் மோடி  மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது கரங்களை வலுப்படுத்த, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில், தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: annamalaikovaiannamalai election campign
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் : திரிபுராவில் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள்!

Next Post

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம் : மாணவர்கள் போராட்டம் !

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies