கங்கோத்ரி கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி மூடி காட்சியளிக்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி கோவில் அமைந்துள்ளது. மிக உயரமான இக்கோவில் கங்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள நான்கு புனிதத் தலங்களில் ஒன்றாகும். தற்போதுபணியாள் சூழ்ந்த கங்கோத்ரி கோவில் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
கங்கோத்ரி கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெண் போர்வை போர்த்தியது போல் பனி மூடி காட்சியளிக்கிறது. கங்கோத்ரி கோயில் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இக்கோவில் 3200 மீ உயரத்தில் தேவதாரு மற்றும் பைன் மரங்களுக்கு மத்தியில் அழகாக அமைந்துள்ளது. தற்போதைய கோவில் 18 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோர்க்கா ஜெனரல் அமர் சிங் தாபாவால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியைச் சுற்றிலும் பல ஆசிரமங்கள் மற்றும் தர்மசாலாக்கள் உள்ளன. இக்கோவில் இடதுபுறத்தில் சுமார் 50 அடி தொலைவில் அமைந்துள்ள “பாகீரதி ஷீலா” என்ற புனித கல்லுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.