ஐபிஎல் கிரிக்கெட் : முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி!
Jul 3, 2025, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் : முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி!

Web Desk by Web Desk
Apr 1, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், 13-வது ஆட்டத்தில், 20 ரன்கள் வித்தியாசத்தில், டெல்லி அணி சென்னையை வீழ்த்தி  முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா, டேவிட் வார்னர்  ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். வார்னர் 52 ரன்களுக்கும், பிரித்வி ஷா 43 ரன்களுக்கும் வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய மிட்சேல் மார்ஷ், ஸ்டப்ஸ் இருவரும் பத்திரனா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ரிஷப் பண்ட் நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 191 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து  192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே – டேரில் மிட்செல் ஆகியோர் நிதானமாக விளையாடி, ரன்களை சேர்த்தனர். இவர்களில் ரஹானே 45 ரன்களிலும், மிட்செல் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து  களமிறங்கிய வீரர்களில் ஷிவம் துபே 18 ரன்களிலும், சமீர் ரிஸ்வி டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இறுதியாக ஜோடி சேர்ந்த ஜடேஜா – தோனி இணை அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

வந்த முதல் பந்திலேயே பௌண்டரி விளாசிய தோனி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 16 பந்துகளில், 4 பௌண்டரி, 3 சிக்சர்களை விளாசி,  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  இதன் மூலம், 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Tags: Delhi capitalschennai super kingsipl 2024Visakhapatnam
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள ஒடிசா : பிரதமர் மோடி

Next Post

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று பிரதமராவார்! – அனுராக் சிங் தாக்கூர்

Related News

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி!

இந்துக்கள் வாழும் பகுதியில் சிறுபான்மையினருக்கு மயானம் அமைக்க எதிர்ப்பு!

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு – அறிவாலய அரசின் அலட்சியமே காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் யாதவ் இடம் பெறாதது ஏன்? – கேப்டன் கில் விளக்கம்!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது!

உயிருக்கு அச்சுறுத்தல் – அஜித்குமார் தாக்குதல் வீடியோ வெளியிட்ட சக்தீஸ்வரன் டிஜிபிக்கு கடிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ஊர்வசி ரவுட்டேலா!

இன்றைய தங்கம் விலை!

கரூர் லாலாபேட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

கோவை BSF வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்!

சங்கராபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி 200 சவரன் நகை கொள்ளை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக சரிவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – பொதுமக்கள் போராட்டம்!

அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies