ஐபிஎல் கிரிக்கெட் : முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி!
Oct 2, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் : முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி!

Web Desk by Web Desk
Apr 1, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், 13-வது ஆட்டத்தில், 20 ரன்கள் வித்தியாசத்தில், டெல்லி அணி சென்னையை வீழ்த்தி  முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா, டேவிட் வார்னர்  ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். வார்னர் 52 ரன்களுக்கும், பிரித்வி ஷா 43 ரன்களுக்கும் வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய மிட்சேல் மார்ஷ், ஸ்டப்ஸ் இருவரும் பத்திரனா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ரிஷப் பண்ட் நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 191 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து  192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே – டேரில் மிட்செல் ஆகியோர் நிதானமாக விளையாடி, ரன்களை சேர்த்தனர். இவர்களில் ரஹானே 45 ரன்களிலும், மிட்செல் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து  களமிறங்கிய வீரர்களில் ஷிவம் துபே 18 ரன்களிலும், சமீர் ரிஸ்வி டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இறுதியாக ஜோடி சேர்ந்த ஜடேஜா – தோனி இணை அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

வந்த முதல் பந்திலேயே பௌண்டரி விளாசிய தோனி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 16 பந்துகளில், 4 பௌண்டரி, 3 சிக்சர்களை விளாசி,  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  இதன் மூலம், 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Tags: ipl 2024VisakhapatnamDelhi capitalschennai super kings
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள ஒடிசா : பிரதமர் மோடி

Next Post

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று பிரதமராவார்! – அனுராக் சிங் தாக்கூர்

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies