ஐபிஎல் கிரிக்கெட் : முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி!
Jul 28, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் : முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி!

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், 13-வது ஆட்டத்தில், 20 ரன்கள் வித்தியாசத்தில், டெல்லி அணி சென்னையை வீழ்த்தி  முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா, டேவிட் வார்னர்  ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். வார்னர் 52 ரன்களுக்கும், பிரித்வி ஷா 43 ரன்களுக்கும் வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய மிட்சேல் மார்ஷ், ஸ்டப்ஸ் இருவரும் பத்திரனா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ரிஷப் பண்ட் நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 191 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து  192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே – டேரில் மிட்செல் ஆகியோர் நிதானமாக விளையாடி, ரன்களை சேர்த்தனர். இவர்களில் ரஹானே 45 ரன்களிலும், மிட்செல் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து  களமிறங்கிய வீரர்களில் ஷிவம் துபே 18 ரன்களிலும், சமீர் ரிஸ்வி டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இறுதியாக ஜோடி சேர்ந்த ஜடேஜா – தோனி இணை அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

வந்த முதல் பந்திலேயே பௌண்டரி விளாசிய தோனி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 16 பந்துகளில், 4 பௌண்டரி, 3 சிக்சர்களை விளாசி,  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  இதன் மூலம், 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Tags: ipl 2024VisakhapatnamDelhi capitalschennai super kings
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள ஒடிசா : பிரதமர் மோடி

Next Post

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று பிரதமராவார்! – அனுராக் சிங் தாக்கூர்

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies