போஜசாலை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
Jul 27, 2025, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போஜசாலை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Web Desk by Web Desk
Apr 1, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 உச்சநீதிமன்றம் போஜசாலை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்கால போஜசாலை வளாகத்தினுள் சரஸ்வதி கோயிலும், அதன் அருகே கமல் மௌலா மசூதியும் அமைந்துள்ளன. கி.பி. 1034-ஆம் ஆண்டு போஜ் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும், பிற்காலத்தில் இப்பகுதியை முற்றுகையிட்ட முகலாயர்கள் அங்கு மசூதி கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, ஒவ்வொரு செவ்வாயன்றும் சூரியோதயம் தொடங்கி அஸ்தமனம் வரை போஜசாலை வளாக கோயிலில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். போஜசாலை வளாக மசூதியில் ஒவ்வொரு வெள்ளியன்றும் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஞானவாபி மசூதி தீர்ப்பை தொடர்ந்து வழிபடும் உரிமைக்காக இரு தரப்பினர் இடையே சர்ச்சை வெடித்ததால், அப்பகுதியில் அறிவியல்பூர்வ தொல்லியல் ஆய்வு நடத்த ஹிந்துக்கள் தரப்பில் ஆஷிஷ் கோயல் என்பவர் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறையினர் 6 வாரங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மத்திய பிரதேசத்தில் உள்ள போஜசாலை மற்றும் கமால் மௌலா மசூதிகளில் தொல்லியல் ஆய்வுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, இஸ்லாமிய தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொல்லியல் துறையின் ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை சமர்பித்த பிறகு உச்சநீதிமன்ற அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல், தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்களில் அதன் தன்மையை மாற்றும் வகையில் எந்த ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Supreme Court refuses to ban archeology research in Bhojasalai Mosque!
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கு – உச்ச நீதிமன்ற விசாரணை!

Next Post

பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டு வெடிப்பு! – சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் முகாம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies