சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!
Oct 26, 2025, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Apr 3, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 13 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிஜப்பூர் மாவட்டத்தின் கோர்சோலி வனப் பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போஸீஸ் படை மற்றும் அதன் கமாண்டோ பிரிவான கோப்ரா ஆகியவை இணைந்து கடந்த 1ம் தேதி முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனத்தில் பதுங்கி இருந்த நக்சலைட்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.  இதில் 133 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடந்திருக்கும் பிஜப்பூர் மாவட்டம், பஸ்தர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு 2024 பொதுத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வரும் 19-ம் தேதி நடக்க உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஸ்தர் பகுதியின் ஐஜி சுந்தர்ராஜ்,

“நக்சல்களுக்கு எதிரான பெரிய நடவடிக்கைகளில் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி இரவு முதல் பிஜப்பூர் மாவட்டத்தின் லேந்தரா, கோர்சோலி வனப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 13 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெரிய எண்ணிக்கையில் நக்சல்கள் காயமடைந்திருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்த இடம், நக்சலைட்டுகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்துள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினரின் 16 புதிய முகாம்கள் அமைக்கப்பட்டன. இதன்மூலம், பாதுகாப்புப் படையினர் மிகவும் நெருக்கமாக கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு இரவிலும் தெரியக்கூடிய பைனாகுலர்கள், புதிய வகை ஆயுதங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன. அவர்கள் மூலம்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நக்சலைட்களின் இரண்டாவது பெரிய படைப்பிரிவான மேற்கு பஸ்தரின் கங்கலூர் ஏரியா கமிட்டி எனும் நக்சல் அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் நேற்று 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இன்று காலை மேலும் 3 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Tags: Number of Naxalites shot dead in Chhattisgarh increases to 13!
ShareTweetSendShare
Previous Post

வானில் நிகழும் அதிசயம் : 70 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்!

Next Post

டெல்லி கேபிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies