2024 ஐபிஎல் தொடரின் 19-வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரின் 19-வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன. இதுவரை இவ்விரு அணிகளும் 30 போட்டிகளில் விளையாடிவுள்ளன.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 54 போட்டிகளில் விளையாடி 39 போட்டிகளில் வெற்றியும் 15 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
மேலும் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55% வெற்றி பெறும் என்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 45% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.