ஒரு மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காங்கிரஸ், நாடு முழுவதும் எப்படி நிறைவேற்ற முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூரூவில் பேசிய அவர், அகில காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறேன்.
இங்கு வெற்றி பெறுவதற்காக சட்டசபைத் தேர்தலின் போது மிகப்பெரிய தேர்தல் அறிக்கையை அளித்தனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, உங்களுக்கு பட்ஜெட் தேவை.
மாநிலத்தில் நிதிச்சுமை உள்ளதாகவும், வளர்ச்சிக்கு நிதி இல்லை என்று டி.ஒய்.சிவக்குமார் கூறுகிறார். ஒரு மாநிலத்தில் இவ்வளவு பெரிய சுமை என்றால் காங்கிரசால் மத்தியில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும்.
எனவே தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நம்ப வேண்டுமா என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.