தர்மத்திற்கும் விஷேச தர்மத்திற்கும் என்ன வேறுபாடு!
Sep 29, 2025, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தர்மத்திற்கும் விஷேச தர்மத்திற்கும் என்ன வேறுபாடு!

Web Desk by Web Desk
Apr 7, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது மரணத்துக்குப் பின்,
தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன்,

சூரியனிடம்,

“தந்தையே!
நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், அவன் பக்கம் போர் புரிந்தேன்.

ஆனால்
வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!”
என்று புலம்பினான்.

அப்போது சூரிய பகவான்,

“இல்லை கர்ணா!
கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே.

நீ ஒரு தவறு செய்துவிட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால்
கண்ணனோ சாமானிய தர்மங்களை விட,
உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.

க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்”

என்று அதனால்தான் சொல்கிறோம்.

அந்தக் ‘கண்ணன்’ என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில்,

விசேஷ தர்மத்தை கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டு விட்டுச் சாமானிய தர்மத்தை கைக்கொண்டு,

விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால்தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்.

அதற்காக
இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா?
நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்.

விபீஷணனும்
தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா?

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காக,
கைகேயியின் ஆசைக்கு பரதன் உடன்பட்டானா?

மகனே!
சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆனால்
விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில்,

விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.

அவ்வகையில்
கண்ணனே அனைத்து தர்மங்களுக்கும் சாரமான, விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில்
‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள்.

வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.

கர்ணனுக்கு
சூரியன் உபதேசித்தபடி, தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால்

‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப் படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102வது திருநாமம்.

வ்ருஷாகபயே நமஹ”

என்ற திருநாமத்தை தினமும் சொல்லி வந்தால், முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும்போது,

சரியான முடிவெடுக்கும் ஆற்றலை, திருமால் நமக்குத் தந்தருள்வார்….

எந்த சூழ்நிலையிலும் நாம் நமது தர்மத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்

காகங்களுடன் குயில்கள் பழகினாலும் குயில்கள் தனது இனிய குரலை மாற்றுவதில்லை

நறுமணம் தரும் மலர்
இடம் மாறி மலர்ந்தாலும்
தனது ஒரிஜினல் நறுமணத்தை தர மறுப்பதில்லை

ஆடுகளுடன் சிங்கங்கள் நட்பு வைத்தாலும்
ஆட்டின் குணம் சிங்கத்துக்கு வருவதில்லை

அதேபோல் 7 ம் ஆறிவை தேடிபோய் கொண்டிருக்கம்
மனிதனாகிய நாம்
எங்கு இருக்கிறோம் என்பதல்ல முக்கியம்,

நமது சனாதன தர்மத்தின் பாதுகாவலாக இருக்கிறோமா?

நமது தர்மத்தை நாம் கடை பிடிக்கிறோமா என்பதே முக்கியம்!.

Tags: krishna
ShareTweetSendShare
Previous Post

பாய்ந்து சென்ற நிர்வாகிகள் – தப்பியோடிய திமுக அமைச்சர்!

Next Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா மும்பை இந்தியன்ஸ் ?

Related News

நாமக்கல்லில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

உலக இருதய தினம் – ஈரோட்டில் “வாக்கத்தான்” போட்டி!

கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!

இந்தியாவில் அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலமாகத் தாஜ் மஹால் உள்ளது – மத்திய அரசு

கிருஷ்ணகிரி : மாணவர்களை இறக்கிவிட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து!

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

கர்நாடகாவில் நகைக்கடை ஊழியரை கடத்தி ரூ.1.5கோடி நகைகள் கொள்ளை!

நெல்லையில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி – இருவர் கைது!

உலகிலேயே முதன்முறையாக நிலக்கரி சுரங்கத்தில் தானியங்கி மின்சார லாரிகளை பயன்படுத்ததும் சீனா!

நவராத்திரி பண்டிகை : நாடு முழுவதும் களைகட்டியுள்ள கொண்டாட்டங்கள்!

ஆயுதங்களைக் கீழே போட்டால் நக்சல்கள் மீது ஒரு தோட்டா கூடப் பாயாது – அமித்ஷா

அமெரிக்காவில் Pumpkin Nights கலைவிழா!

100 ஆண்டுகளாக தேச சேவையில் அயராது ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு – பிரதமர் மோடி புகழாரம்!

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – நிர்மலா சீதாராமன் ஆறுதல்!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies