ஈசனுக்கு படை வீடு எட்டு!
Jun 4, 2025, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈசனுக்கு படை வீடு எட்டு!

Web Desk by Web Desk
Apr 8, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘அறுமுகச் சிவன்’ என்றுப் போற்றப் படுகிற ஆறுமுகப் பெருமானுக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதே போல அவன் முருகப் பெருமானின் தந்தை, சிவபெருமானுக்கும் படை வீடுகள் உண்டு. ஒன்றல்ல இரண்டல்ல. எட்டுப் படை வீடுகள் ஈசனுக்கு இருக்கின்றன .

திருவதிகை வீரட்டானேஸ்வரர், நாவுக்கரசு என்று சிறப்புப் பெயர் சூட்டிய அப்பர் பெருமான் தம் தேவாரத்தில், அந்தப் படை வீடுகளை வரிசையாக நமக்கு சொல்லித் தருகிறார்.

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம், காமருஞ்சீர் அதிகை
மேவீய வீரட்டானம், வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம், விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!

என்று சிவபெருமானின் எட்டுப் படைவீடுகளைப் பட்டியலியிடும் அப்பர் சுவாமிகள், இந்தப் படைவீடுகளை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் திருப்பாட்டின் இறுதியில் சொல்லி விடுகிறார்.

மேலே உள்ள பாட்டின் பொருள் வருமாறு:  திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை , திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவிலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி ஆகிய எட்டுத் தலங்களில் சதாசிவ மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் பைரவப் பெருமானை, நாவார வழுத்தி வழிபடும் பக்தர்களை எக்காலமும் எமதர்மன் நெருங்கிடான். இவர்கள் அடியவர்கள் எனவே சிவபெருமானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆகவே எமன் இவர்களைக் கண்டால் அஞ்சி வணங்கி ஒதுங்கிப் போவான்.

எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் உயிர்கள் மீது கொண்ட கருணையால் எட்டு வீரச் செயல்கள் புரிந்த இடமே – அட்ட வீரட்டம் .

பிரமனின் தலைகொய்த வீரச்செயல் புரிந்த திருக்கண்டியூர், எமனைக் காலால் உதைத்த
திருக்கடவூர், முப்புரம் எரித்த செயல் புரிந்த திருவதிகை, கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் திருவழுவூர், தக்கனின் ஆணவத்தை அழித்த திருப்பறியலூர், அந்தகாசுரனை வாதம் செய்த திருக்கோவிலூர், மன்மதனை எரித்த வீரச் செயல் புரிந்த திருக்குறுக்கை, ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி.

இந்த அட்ட வீரட்டத்து தலங்களில் எல்லாம் வீரட்டானேஸ்வரர் சுவாமி அழைக்கப்படுகிறார். நாமும் இந்த வீரட்டானேசுவரை வழிபட்டு வாழ்வில் நல்வழி செல்வோம் .

Tags: Eight for Eason!
ShareTweetSendShare
Previous Post

கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பாஜக வெற்றி பெறும் : பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பு!

Next Post

முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

Related News

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies