ஈசனுக்கு படை வீடு எட்டு!
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈசனுக்கு படை வீடு எட்டு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘அறுமுகச் சிவன்’ என்றுப் போற்றப் படுகிற ஆறுமுகப் பெருமானுக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதே போல அவன் முருகப் பெருமானின் தந்தை, சிவபெருமானுக்கும் படை வீடுகள் உண்டு. ஒன்றல்ல இரண்டல்ல. எட்டுப் படை வீடுகள் ஈசனுக்கு இருக்கின்றன .

திருவதிகை வீரட்டானேஸ்வரர், நாவுக்கரசு என்று சிறப்புப் பெயர் சூட்டிய அப்பர் பெருமான் தம் தேவாரத்தில், அந்தப் படை வீடுகளை வரிசையாக நமக்கு சொல்லித் தருகிறார்.

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம், காமருஞ்சீர் அதிகை
மேவீய வீரட்டானம், வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம், விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!

என்று சிவபெருமானின் எட்டுப் படைவீடுகளைப் பட்டியலியிடும் அப்பர் சுவாமிகள், இந்தப் படைவீடுகளை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் திருப்பாட்டின் இறுதியில் சொல்லி விடுகிறார்.

மேலே உள்ள பாட்டின் பொருள் வருமாறு:  திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை , திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவிலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி ஆகிய எட்டுத் தலங்களில் சதாசிவ மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் பைரவப் பெருமானை, நாவார வழுத்தி வழிபடும் பக்தர்களை எக்காலமும் எமதர்மன் நெருங்கிடான். இவர்கள் அடியவர்கள் எனவே சிவபெருமானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆகவே எமன் இவர்களைக் கண்டால் அஞ்சி வணங்கி ஒதுங்கிப் போவான்.

எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் உயிர்கள் மீது கொண்ட கருணையால் எட்டு வீரச் செயல்கள் புரிந்த இடமே – அட்ட வீரட்டம் .

பிரமனின் தலைகொய்த வீரச்செயல் புரிந்த திருக்கண்டியூர், எமனைக் காலால் உதைத்த
திருக்கடவூர், முப்புரம் எரித்த செயல் புரிந்த திருவதிகை, கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் திருவழுவூர், தக்கனின் ஆணவத்தை அழித்த திருப்பறியலூர், அந்தகாசுரனை வாதம் செய்த திருக்கோவிலூர், மன்மதனை எரித்த வீரச் செயல் புரிந்த திருக்குறுக்கை, ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி.

இந்த அட்ட வீரட்டத்து தலங்களில் எல்லாம் வீரட்டானேஸ்வரர் சுவாமி அழைக்கப்படுகிறார். நாமும் இந்த வீரட்டானேசுவரை வழிபட்டு வாழ்வில் நல்வழி செல்வோம் .

Tags: Eight for Eason!
ShareTweetSendShare
Previous Post

கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பாஜக வெற்றி பெறும் : பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பு!

Next Post

முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies