ஈசனுக்கு படை வீடு எட்டு!
Jul 29, 2026, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈசனுக்கு படை வீடு எட்டு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘அறுமுகச் சிவன்’ என்றுப் போற்றப் படுகிற ஆறுமுகப் பெருமானுக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதே போல அவன் முருகப் பெருமானின் தந்தை, சிவபெருமானுக்கும் படை வீடுகள் உண்டு. ஒன்றல்ல இரண்டல்ல. எட்டுப் படை வீடுகள் ஈசனுக்கு இருக்கின்றன .

திருவதிகை வீரட்டானேஸ்வரர், நாவுக்கரசு என்று சிறப்புப் பெயர் சூட்டிய அப்பர் பெருமான் தம் தேவாரத்தில், அந்தப் படை வீடுகளை வரிசையாக நமக்கு சொல்லித் தருகிறார்.

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம், காமருஞ்சீர் அதிகை
மேவீய வீரட்டானம், வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம், விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!

என்று சிவபெருமானின் எட்டுப் படைவீடுகளைப் பட்டியலியிடும் அப்பர் சுவாமிகள், இந்தப் படைவீடுகளை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் திருப்பாட்டின் இறுதியில் சொல்லி விடுகிறார்.

மேலே உள்ள பாட்டின் பொருள் வருமாறு:  திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை , திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவிலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி ஆகிய எட்டுத் தலங்களில் சதாசிவ மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் பைரவப் பெருமானை, நாவார வழுத்தி வழிபடும் பக்தர்களை எக்காலமும் எமதர்மன் நெருங்கிடான். இவர்கள் அடியவர்கள் எனவே சிவபெருமானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆகவே எமன் இவர்களைக் கண்டால் அஞ்சி வணங்கி ஒதுங்கிப் போவான்.

எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் உயிர்கள் மீது கொண்ட கருணையால் எட்டு வீரச் செயல்கள் புரிந்த இடமே – அட்ட வீரட்டம் .

பிரமனின் தலைகொய்த வீரச்செயல் புரிந்த திருக்கண்டியூர், எமனைக் காலால் உதைத்த
திருக்கடவூர், முப்புரம் எரித்த செயல் புரிந்த திருவதிகை, கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் திருவழுவூர், தக்கனின் ஆணவத்தை அழித்த திருப்பறியலூர், அந்தகாசுரனை வாதம் செய்த திருக்கோவிலூர், மன்மதனை எரித்த வீரச் செயல் புரிந்த திருக்குறுக்கை, ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி.

இந்த அட்ட வீரட்டத்து தலங்களில் எல்லாம் வீரட்டானேஸ்வரர் சுவாமி அழைக்கப்படுகிறார். நாமும் இந்த வீரட்டானேசுவரை வழிபட்டு வாழ்வில் நல்வழி செல்வோம் .

Tags: Eight for Eason!
ShareTweetSendShare
Previous Post

கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பாஜக வெற்றி பெறும் : பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பு!

Next Post

முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies