ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரியும், அவர் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வலியுறுத்தியும் டெல்லி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுப்பிக்கப்பட்ட முதல்வரின் அதிகாரப்பூர்வ பங்களாவின் பிரதியை போராட்டக்காரர்கள் பயன்படுத்தி அதற்கு ‘ஷீஷ்மஹால்’ என்று பெயரிட்டனர். கட்டுமானம் மற்றும் புதுப்பித்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
போராட்டம் நடைபெற்ற இடத்தில் செல்ஃபி பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டது. டெல்லி மதுக் கொள்கை ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்களின் மதுபான பாட்டில் வடிவ கட்அவுட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. மின்சாரம் இல்லை. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.