சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? - ராஜ்நாத் சிங் கேள்வி
Jan 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? – ராஜ்நாத் சிங் கேள்வி

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறது, ஆனால் யாராவது நமது சுயமரியாதையை புண்படுத்த முயன்றால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை சீனா மாற்றுவது குறித்து வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய கேள்வியை எழுப்பினார். சீனாவில் உள்ள சில இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால், அது நம்முடையதாக மாறுமா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

அருணாச்சல கிழக்குத் தொகுதியில் நாம்சாய் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாஜக தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“இது எங்கள் வீடு, சமீபத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மூன்று இடங்களுக்கு ‘மறுபெயரிட்டு’ சீனா தனது இணையதளத்தில் வெளியிட்டது. பெயர்களை மாற்றுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நம் அண்டை வீட்டாரிடம் சொல்ல விரும்புகிறேன். நாளை சீனாவில் உள்ள மாநிலங்களில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால், அவற்றை எங்களுடையதாக ஆகுமா? சீனா இந்த தவறை செய்யக்கூடாது” என்று தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன்.  இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண விரும்புகிறது. எங்கள் சுயமரியாதையை புண்படுத்தினால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது,” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ், மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான நிலங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை சுட்டிக்காட்டியவர், வடகிழக்கில் பிரதமர் மோடியின் கவனம் செலுத்துவதற்கு இது சான்றாகும் என்றார்.

இந்தியாவின் நிலத்தை இப்போது யாரும் எடுக்க முடியாது, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். காங்கிரஸின் தவறுகளைச் சரிசெய்து எல்லைக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம். எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களை காங்கிரஸ் கடைசி கிராமங்கள் என்று அழைத்தது, ஆனால் நாங்கள் நாட்டின் முதல் கிராமங்கள் என்று சொல்கிறோம். நாங்கள் கிராமங்களை வேகமாக வளர்ச்சி அடைய செய்து வருகிறோம், எல்லையோர கிராமங்கள் மேம்பட்டால் மட்டுமே, எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றார்.

Tags: chennai rajnath singh
ShareTweetSendShare
Previous Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் மோடி : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Next Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் : என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மோடி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies