சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? - ராஜ்நாத் சிங் கேள்வி
Jul 26, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? – ராஜ்நாத் சிங் கேள்வி

Web Desk by Web Desk
Apr 9, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறது, ஆனால் யாராவது நமது சுயமரியாதையை புண்படுத்த முயன்றால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை சீனா மாற்றுவது குறித்து வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய கேள்வியை எழுப்பினார். சீனாவில் உள்ள சில இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால், அது நம்முடையதாக மாறுமா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

அருணாச்சல கிழக்குத் தொகுதியில் நாம்சாய் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாஜக தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“இது எங்கள் வீடு, சமீபத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மூன்று இடங்களுக்கு ‘மறுபெயரிட்டு’ சீனா தனது இணையதளத்தில் வெளியிட்டது. பெயர்களை மாற்றுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நம் அண்டை வீட்டாரிடம் சொல்ல விரும்புகிறேன். நாளை சீனாவில் உள்ள மாநிலங்களில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால், அவற்றை எங்களுடையதாக ஆகுமா? சீனா இந்த தவறை செய்யக்கூடாது” என்று தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன்.  இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண விரும்புகிறது. எங்கள் சுயமரியாதையை புண்படுத்தினால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது,” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ், மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான நிலங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை சுட்டிக்காட்டியவர், வடகிழக்கில் பிரதமர் மோடியின் கவனம் செலுத்துவதற்கு இது சான்றாகும் என்றார்.

இந்தியாவின் நிலத்தை இப்போது யாரும் எடுக்க முடியாது, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். காங்கிரஸின் தவறுகளைச் சரிசெய்து எல்லைக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம். எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களை காங்கிரஸ் கடைசி கிராமங்கள் என்று அழைத்தது, ஆனால் நாங்கள் நாட்டின் முதல் கிராமங்கள் என்று சொல்கிறோம். நாங்கள் கிராமங்களை வேகமாக வளர்ச்சி அடைய செய்து வருகிறோம், எல்லையோர கிராமங்கள் மேம்பட்டால் மட்டுமே, எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றார்.

Tags: chennai rajnath singh
ShareTweetSendShare
Previous Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் மோடி : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Next Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் : என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மோடி!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies