சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? - ராஜ்நாத் சிங் கேள்வி
Apr 30, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? – ராஜ்நாத் சிங் கேள்வி

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறது, ஆனால் யாராவது நமது சுயமரியாதையை புண்படுத்த முயன்றால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை சீனா மாற்றுவது குறித்து வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய கேள்வியை எழுப்பினார். சீனாவில் உள்ள சில இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால், அது நம்முடையதாக மாறுமா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

அருணாச்சல கிழக்குத் தொகுதியில் நாம்சாய் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாஜக தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“இது எங்கள் வீடு, சமீபத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மூன்று இடங்களுக்கு ‘மறுபெயரிட்டு’ சீனா தனது இணையதளத்தில் வெளியிட்டது. பெயர்களை மாற்றுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நம் அண்டை வீட்டாரிடம் சொல்ல விரும்புகிறேன். நாளை சீனாவில் உள்ள மாநிலங்களில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால், அவற்றை எங்களுடையதாக ஆகுமா? சீனா இந்த தவறை செய்யக்கூடாது” என்று தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன்.  இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண விரும்புகிறது. எங்கள் சுயமரியாதையை புண்படுத்தினால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது,” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ், மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான நிலங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை சுட்டிக்காட்டியவர், வடகிழக்கில் பிரதமர் மோடியின் கவனம் செலுத்துவதற்கு இது சான்றாகும் என்றார்.

இந்தியாவின் நிலத்தை இப்போது யாரும் எடுக்க முடியாது, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். காங்கிரஸின் தவறுகளைச் சரிசெய்து எல்லைக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம். எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களை காங்கிரஸ் கடைசி கிராமங்கள் என்று அழைத்தது, ஆனால் நாங்கள் நாட்டின் முதல் கிராமங்கள் என்று சொல்கிறோம். நாங்கள் கிராமங்களை வேகமாக வளர்ச்சி அடைய செய்து வருகிறோம், எல்லையோர கிராமங்கள் மேம்பட்டால் மட்டுமே, எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றார்.

Tags: chennai rajnath singh
ShareTweetSendShare
Previous Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் மோடி : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Next Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் : என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மோடி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies