இரண்டாம் கட்டத் தேர்தல் 1210 வேட்பாளர்கள் போட்டி!
Oct 25, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரண்டாம் கட்டத் தேர்தல் 1210 வேட்பாளர்கள் போட்டி!

Web Desk by Web Desk
Apr 9, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இதில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர்.

மக்களவைக்கு நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 2633 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-ஆம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 4 ஆகும். தாக்கல் செய்யப்பட்ட 2633 வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில் 1428 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என கண்டறியப்பட்டது.  நேற்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். தற்போது மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக 500 பேரும், கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளில் 491 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திரிபுராவில் ஒரு தொகுதியில் இருந்து 14 பேர் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் தொகுதியில் அதிகபட்சமாக 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அசாமில் 5 தொகுதிகளுக்கு 118 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மனுக்கள் திரும்ப பெறும் அவகாசம் முடிந்ததற்கு பின்னர் 61 பேர் களத்தில் உள்ளனர்.

பீகாரில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்டத் தேர்தலுக்கு 146 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 55 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. களத்தில் 50 பேர் உள்ளனர்.

சத்தீஷ்கரில் 3 தொகுதிகளில் 41 பேர் களத்தில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் 14 தொகுதிகளில் 247 பேரும், மத்தியப்பிரதேசத்தின்  7 தொகுதிகளில் 88 பேரும், மஹாராஷ்டிராவில் 8 தொகுதிகளில் 204 பேரும்,  ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் 152 பேரும், திரிபுராவில் ஒரு தொகுதியில் ஒன்பது பேரும் களம் காண்கின்றனர்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 500 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்ததில் 204 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் திரும்ப பெறப்பட்ட பின்னர் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளில் 91 பேரும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் 47 பேரும் களத்தில் உள்ளனர்.

அவுட்டர் மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கிய 15 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 19-ம் தேதி முதல் கட்டமாகவும், 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்கள் மற்றும யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் 1625 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 1491 பேர், பெண் வேட்பாளர்கள் 134 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: election commisioneciSecond phase election 1210 candidates competition!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாத சீனா : அமித் ஷா

Next Post

கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies