நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பற்றிய சில குறிப்புகள்!
Jul 26, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பற்றிய சில குறிப்புகள்!

Web Desk by Web Desk
Apr 10, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் முதற்கட்டத் தேர்தல் 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இதில் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள், 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் மற்றும் 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்தியாவில் மொத்தமாக 543 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ளன. இதில் 84 சீட்டுகள் எஸ்.சி பிரிவினருக்கும், 47 சீட்டுக்கள் எஸ்.டீ பிரிவினருக்கும் மீதமுள்ள 412 சீட்டுக்கள் பொது சீட்டாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 97 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 49.7 கோடி ஆண் வாக்காளர்களும், 47.1 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 48,000 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் 18-வது மக்களவை தேர்தலில் 18-19 வயது நிரம்பிய 1.8 கோடி இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 85 லட்சம் பெண் வாக்காளர்களாக உள்ளனர். அதே போல் 20 – 29 வயதில் உள்ள 19.74 கோடி இளைய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளனர்.

மேலும், 85 வயதை கடந்த 82 லட்சம் வாக்காளர்களும், 100 வயதை கடந்த 2.18 லட்சம் வாக்காளர்களும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 8 லட்சம் மாற்று திறனாளிகள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.

மேலும் இந்த தேர்தலில் போட்டியிட 2798 கட்சிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 6 அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், 58 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் 2019 ஆம் ஆண்டு 67.4% வாக்குகள் பதிவாகியது, இந்த முறை அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று நம்பப்படுகிறது.

Tags: 2024 ElectionSome tips about parliamentary elections!
ShareTweetSendShare
Previous Post

முன்னேற்றம் தரும் முதல் பைரவர் தலம்!

Next Post

பிரதமர் மோடியின் அசத்தலான திட்டம்: 100 நாளில் அபார வளர்ச்சி அடையப் போகும் ரயில்வே! 

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies