மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கோவில் !
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கோவில் !

Sivasubramanian P by Sivasubramanian P
Apr 12, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழ நாட்டு சிவத்தலங்களில் முக்கியமான திருத் தலமாக விளங்குகின்ற இத் திருத் தலத்தின் புராணக் காலப் பெயர் திருப் பறியலூர் என்பதாகும்.

இறைவனுக்கு நன்றி மறந்த பாவத்தை செய்த தேவர்களின் தீவினைகளை எல்லாம் இறைவன் தகுந்த தண்டனை கொடுத்து பறித்ததால் காரணப் பெயராக இத்தலம் பறியலூர் என்றே அழைக்கப் பட்டது . பிரமனின் மகன் தக்கன் யாகம் செய்த இடம் என்பதால் இது தக்ஷ புரம் என்றும் அழைக்கப் பெற்றது . காலப் போக்கில் மக்கள் வழக்காக பரசலூர் என்று அழைக்கப் படலாயிற்று .

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இந்த தலத்து இறைவன் இளங்கொம்பனையாள் உடனுறை வீரட்டேஸ்வரர் என்று போற்றப் படுகிறார் . சுவாமிக்கு தக்ஷபுரீஸ்வரர் என்றொரு திருநாமமும் உண்டு .

உத்திரவேதி தீர்த்தமும் , வில்வ தலமரமும் கொண்டு விளங்கும் இந்தத் திருக்கோவிலில் நவகிரக சன்னதி இல்லை . மாறாக நவகிரகங்களின் நாயகனான சூரிய பகவானின் சன்னதி மட்டுமே உள்ளது .

தக்கன் தனக்கு வரமளித்த சிவபெருமானை போற்றாமலும் , சிவபெருமானுக்கு உரிய அவிர் பாகத்தைத் தராமலும் , எல்லாவற்றுக்கும் மேலாக சிவபெருமானை அவமதிக்கும் விதமாக தானே யாகத்தை நடத்துகிறான் .


தக்கனின் ஆணவத்தை அடக்கும் வகையில் வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்து , தக்கனின் மனைவி மாங்கல்ய பிச்சை கேட்க, யாகத்தில் கிடந்த ஆட்டுத் தலையை தக்கன் உடலோடு பொருத்தி இறைவன் அருள் பாலிக்கிறான் .

இதை உணர்த்தும் விதமாக இந்தக் கோவில் கருவறையில் தக்கன் சிவபெருமானைபூஜை செய்யும்  சிற்பம் உள்ளது .

 

திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் இந்தத் திருத் தலத்துக்கு தலபுராணம் அருளிச் செய்துள்ளார்கள் என்பது இந்தக் கோவிலுக்குக் கூடுதல் சிறப்பு .

நறுநீர் உகும் காழி ஞான சம்பந்தன்
வெறி நீர்த்திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறு நீடு அவலம் ,அறும் பிறப்புத் தானே ! என்று திருஞான சம்பந்தர் திருமுறை பாடி இத் திருத் தலத்து வீரட்டானேஸ்வரரை வணங்கினால் நம் வாழ்வில் இன்பங்களே தொடரும். மேலும் வாழ்வின் முடிவில் இனி பிறவி வாராத முக்தி நிலை ஏற்படும் .

இதுமட்டுமில்லை , திரு ஞான சம்பந்தர் அறுநீடு அவலம் என்று சொல்லி விட்டதால் , இந்தக் கோவிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ,மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் . நன்மக்கள் பேறும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை .

Tags: A temple for a happy family life!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies