மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கோவில் !
Jul 29, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கோவில் !

Web Desk by Web Desk
Apr 12, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழ நாட்டு சிவத்தலங்களில் முக்கியமான திருத் தலமாக விளங்குகின்ற இத் திருத் தலத்தின் புராணக் காலப் பெயர் திருப் பறியலூர் என்பதாகும்.

இறைவனுக்கு நன்றி மறந்த பாவத்தை செய்த தேவர்களின் தீவினைகளை எல்லாம் இறைவன் தகுந்த தண்டனை கொடுத்து பறித்ததால் காரணப் பெயராக இத்தலம் பறியலூர் என்றே அழைக்கப் பட்டது . பிரமனின் மகன் தக்கன் யாகம் செய்த இடம் என்பதால் இது தக்ஷ புரம் என்றும் அழைக்கப் பெற்றது . காலப் போக்கில் மக்கள் வழக்காக பரசலூர் என்று அழைக்கப் படலாயிற்று .

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இந்த தலத்து இறைவன் இளங்கொம்பனையாள் உடனுறை வீரட்டேஸ்வரர் என்று போற்றப் படுகிறார் . சுவாமிக்கு தக்ஷபுரீஸ்வரர் என்றொரு திருநாமமும் உண்டு .

உத்திரவேதி தீர்த்தமும் , வில்வ தலமரமும் கொண்டு விளங்கும் இந்தத் திருக்கோவிலில் நவகிரக சன்னதி இல்லை . மாறாக நவகிரகங்களின் நாயகனான சூரிய பகவானின் சன்னதி மட்டுமே உள்ளது .

தக்கன் தனக்கு வரமளித்த சிவபெருமானை போற்றாமலும் , சிவபெருமானுக்கு உரிய அவிர் பாகத்தைத் தராமலும் , எல்லாவற்றுக்கும் மேலாக சிவபெருமானை அவமதிக்கும் விதமாக தானே யாகத்தை நடத்துகிறான் .


தக்கனின் ஆணவத்தை அடக்கும் வகையில் வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்து , தக்கனின் மனைவி மாங்கல்ய பிச்சை கேட்க, யாகத்தில் கிடந்த ஆட்டுத் தலையை தக்கன் உடலோடு பொருத்தி இறைவன் அருள் பாலிக்கிறான் .

இதை உணர்த்தும் விதமாக இந்தக் கோவில் கருவறையில் தக்கன் சிவபெருமானைபூஜை செய்யும்  சிற்பம் உள்ளது .

 

திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் இந்தத் திருத் தலத்துக்கு தலபுராணம் அருளிச் செய்துள்ளார்கள் என்பது இந்தக் கோவிலுக்குக் கூடுதல் சிறப்பு .

நறுநீர் உகும் காழி ஞான சம்பந்தன்
வெறி நீர்த்திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறு நீடு அவலம் ,அறும் பிறப்புத் தானே ! என்று திருஞான சம்பந்தர் திருமுறை பாடி இத் திருத் தலத்து வீரட்டானேஸ்வரரை வணங்கினால் நம் வாழ்வில் இன்பங்களே தொடரும். மேலும் வாழ்வின் முடிவில் இனி பிறவி வாராத முக்தி நிலை ஏற்படும் .

இதுமட்டுமில்லை , திரு ஞான சம்பந்தர் அறுநீடு அவலம் என்று சொல்லி விட்டதால் , இந்தக் கோவிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ,மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் . நன்மக்கள் பேறும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை .

Tags: A temple for a happy family life!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Related News

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

கிங்டம் திரைப்படம் ரஜினியின் படங்கள் போல இருக்கும் : விஜய் தேவரகொண்டா

பயோமெட்ரிக் மூலம் பணப்பரிவர்த்தனை – விரைவில் அமல்!

மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டம் : எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies