மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கோவில் !
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கோவில் !

Sivasubramanian P by Sivasubramanian P
Apr 12, 2024, 07:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சோழ நாட்டு சிவத்தலங்களில் முக்கியமான திருத் தலமாக விளங்குகின்ற இத் திருத் தலத்தின் புராணக் காலப் பெயர் திருப் பறியலூர் என்பதாகும்.

இறைவனுக்கு நன்றி மறந்த பாவத்தை செய்த தேவர்களின் தீவினைகளை எல்லாம் இறைவன் தகுந்த தண்டனை கொடுத்து பறித்ததால் காரணப் பெயராக இத்தலம் பறியலூர் என்றே அழைக்கப் பட்டது . பிரமனின் மகன் தக்கன் யாகம் செய்த இடம் என்பதால் இது தக்ஷ புரம் என்றும் அழைக்கப் பெற்றது . காலப் போக்கில் மக்கள் வழக்காக பரசலூர் என்று அழைக்கப் படலாயிற்று .

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இந்த தலத்து இறைவன் இளங்கொம்பனையாள் உடனுறை வீரட்டேஸ்வரர் என்று போற்றப் படுகிறார் . சுவாமிக்கு தக்ஷபுரீஸ்வரர் என்றொரு திருநாமமும் உண்டு .

உத்திரவேதி தீர்த்தமும் , வில்வ தலமரமும் கொண்டு விளங்கும் இந்தத் திருக்கோவிலில் நவகிரக சன்னதி இல்லை . மாறாக நவகிரகங்களின் நாயகனான சூரிய பகவானின் சன்னதி மட்டுமே உள்ளது .

தக்கன் தனக்கு வரமளித்த சிவபெருமானை போற்றாமலும் , சிவபெருமானுக்கு உரிய அவிர் பாகத்தைத் தராமலும் , எல்லாவற்றுக்கும் மேலாக சிவபெருமானை அவமதிக்கும் விதமாக தானே யாகத்தை நடத்துகிறான் .


தக்கனின் ஆணவத்தை அடக்கும் வகையில் வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்து , தக்கனின் மனைவி மாங்கல்ய பிச்சை கேட்க, யாகத்தில் கிடந்த ஆட்டுத் தலையை தக்கன் உடலோடு பொருத்தி இறைவன் அருள் பாலிக்கிறான் .

இதை உணர்த்தும் விதமாக இந்தக் கோவில் கருவறையில் தக்கன் சிவபெருமானைபூஜை செய்யும்  சிற்பம் உள்ளது .

 

திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் இந்தத் திருத் தலத்துக்கு தலபுராணம் அருளிச் செய்துள்ளார்கள் என்பது இந்தக் கோவிலுக்குக் கூடுதல் சிறப்பு .

நறுநீர் உகும் காழி ஞான சம்பந்தன்
வெறி நீர்த்திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறு நீடு அவலம் ,அறும் பிறப்புத் தானே ! என்று திருஞான சம்பந்தர் திருமுறை பாடி இத் திருத் தலத்து வீரட்டானேஸ்வரரை வணங்கினால் நம் வாழ்வில் இன்பங்களே தொடரும். மேலும் வாழ்வின் முடிவில் இனி பிறவி வாராத முக்தி நிலை ஏற்படும் .

இதுமட்டுமில்லை , திரு ஞான சம்பந்தர் அறுநீடு அவலம் என்று சொல்லி விட்டதால் , இந்தக் கோவிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ,மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் . நன்மக்கள் பேறும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை .

Tags: A temple for a happy family life!
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies