மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கோவில் !
Jul 28, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கோவில் !

Sivasubramanian P by Sivasubramanian P
Apr 12, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழ நாட்டு சிவத்தலங்களில் முக்கியமான திருத் தலமாக விளங்குகின்ற இத் திருத் தலத்தின் புராணக் காலப் பெயர் திருப் பறியலூர் என்பதாகும்.

இறைவனுக்கு நன்றி மறந்த பாவத்தை செய்த தேவர்களின் தீவினைகளை எல்லாம் இறைவன் தகுந்த தண்டனை கொடுத்து பறித்ததால் காரணப் பெயராக இத்தலம் பறியலூர் என்றே அழைக்கப் பட்டது . பிரமனின் மகன் தக்கன் யாகம் செய்த இடம் என்பதால் இது தக்ஷ புரம் என்றும் அழைக்கப் பெற்றது . காலப் போக்கில் மக்கள் வழக்காக பரசலூர் என்று அழைக்கப் படலாயிற்று .

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இந்த தலத்து இறைவன் இளங்கொம்பனையாள் உடனுறை வீரட்டேஸ்வரர் என்று போற்றப் படுகிறார் . சுவாமிக்கு தக்ஷபுரீஸ்வரர் என்றொரு திருநாமமும் உண்டு .

உத்திரவேதி தீர்த்தமும் , வில்வ தலமரமும் கொண்டு விளங்கும் இந்தத் திருக்கோவிலில் நவகிரக சன்னதி இல்லை . மாறாக நவகிரகங்களின் நாயகனான சூரிய பகவானின் சன்னதி மட்டுமே உள்ளது .

தக்கன் தனக்கு வரமளித்த சிவபெருமானை போற்றாமலும் , சிவபெருமானுக்கு உரிய அவிர் பாகத்தைத் தராமலும் , எல்லாவற்றுக்கும் மேலாக சிவபெருமானை அவமதிக்கும் விதமாக தானே யாகத்தை நடத்துகிறான் .


தக்கனின் ஆணவத்தை அடக்கும் வகையில் வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்து , தக்கனின் மனைவி மாங்கல்ய பிச்சை கேட்க, யாகத்தில் கிடந்த ஆட்டுத் தலையை தக்கன் உடலோடு பொருத்தி இறைவன் அருள் பாலிக்கிறான் .

இதை உணர்த்தும் விதமாக இந்தக் கோவில் கருவறையில் தக்கன் சிவபெருமானைபூஜை செய்யும்  சிற்பம் உள்ளது .

 

திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் இந்தத் திருத் தலத்துக்கு தலபுராணம் அருளிச் செய்துள்ளார்கள் என்பது இந்தக் கோவிலுக்குக் கூடுதல் சிறப்பு .

நறுநீர் உகும் காழி ஞான சம்பந்தன்
வெறி நீர்த்திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறு நீடு அவலம் ,அறும் பிறப்புத் தானே ! என்று திருஞான சம்பந்தர் திருமுறை பாடி இத் திருத் தலத்து வீரட்டானேஸ்வரரை வணங்கினால் நம் வாழ்வில் இன்பங்களே தொடரும். மேலும் வாழ்வின் முடிவில் இனி பிறவி வாராத முக்தி நிலை ஏற்படும் .

இதுமட்டுமில்லை , திரு ஞான சம்பந்தர் அறுநீடு அவலம் என்று சொல்லி விட்டதால் , இந்தக் கோவிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ,மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் . நன்மக்கள் பேறும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை .

Tags: A temple for a happy family life!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Related News

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies