மாலத்தீவு சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவில் ரோடு ஷோ நடத்த திட்டம்!
Jan 14, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாலத்தீவு சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவில் ரோடு ஷோ நடத்த திட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி குறித்து சர்ச்சையாகக் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டுச் சுற்றுலா அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

இந்தியா மாலத்தீவுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்து மாலத்தீவு ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இதன் காரணமாக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இதனால் மாலத்தீவின் சுற்றுலா வருவாய் குறைந்து வருகிறது.

இந்நிலையில் இழந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் மாலத்தீவுக்கு அழைக்கும் வகையில், அங்குள்ள உள்ள ஒரு முக்கிய சுற்றுலா அமைப்பு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட்ஷோ நடத்தத் திட்டமிட்டுள்ளது.

MATATO எனப்படும் மாலதீவுகள் சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் முதலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து இந்தியத் தூதர் முனு மஹாவருடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து ரோட் ஷோ நடத்தப்படும் என்று அறவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாலேயில் உள்ள இந்தியத் தூதருடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சுற்றுலாவை மேம்படுத்த மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “முக்கிய இந்திய நகரங்களில் ரோட் ஷோ நடத்த உள்ளோம். மாலத்தீவிற்கு இந்தியா ஒரு முக்கியமான சுற்றுலாவாக இருக்கும் அதே வேளையில், சுற்றுலாவை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முதலில் மாலத்தீவுக்குச் செல்லும் டாப் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த நிலையில், அது இப்போது 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மாலதீவுகளின் சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வரை மாலத்தீவுக்கு மொத்தமாக 6,63,269 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.

அதில் அதிகபட்சமாகச் சீனாவிலிருந்த 71,995 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அடுத்து இங்கிலாந்திலிருந்து 66,999 சுற்றுலாப் பயணிகள், ரஷ்யாவிலிருந்து 66,803 சுற்றுலாப் பயணிகள், இத்தாலியிலிருந்து 61,379 சுற்றுலாப் பயணிகள், ஜெர்மனியிலிருந்து 52,256 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.

அடுத்ததாக இந்தியாவில் இருந்து 37,417 சுற்றுலா பணிகள் மட்டுமே சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Plan to hold a road show in India to promote Maldives tourism!
ShareTweetSendShare
Previous Post

குடும்ப கட்சிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கும் ஜம்மு காஷ்மீர் : பிரதமர் மோடி

Next Post

மீன்பிடி தடைக்காலம் முன்பே நிறுத்தி வைத்த படகுகள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies