மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடைக்காலம் முன்பாகவே ராமேஸ்வரத்தில் 80 சதவீத விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்படும் தடைக்காலம் ஏப்.15 ல் துவங்குகிறது.
கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், கடல் வளம் பாதுகாக்கவும் ஏப்.15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகை, சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் மீன்பிடிக்க செல்ல தடைக்காலம் தொடங்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்பாகவே ராமேஸ்வரத்தில் 80 சதவீத விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் மீன் பிடித் தளத்தில் 750 விசைப் படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், 25 ஆயிரம் தொழிலாளா்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். மீன் பிடித் தடைக்காலம் வரும் 14 -ஆம் தேதி நள்ளிரவு தொடங்க உள்ளது.
ஆனால், ராமேஸ்வரத்தில் இதற்கு முன்பாகவே 80 சதவீத விசைப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 20 சதவீத விசைப் படகுகளும் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றுவிட்டு கரைக்குத் திரும்பியவுடன் நிறுத்திவைக்கப்படும் என மீனவா்கள் தெரிவித்தனா்.
இந்த மீன் பிடித் தடைக் காலத்தின் போது, மீனவா்கள் விசைப் படகுகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.