பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான தலைவர் பதவியில் இருந்து மேரி கோம் விலகல்!
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான தலைவர் பதவியில் இருந்து மேரி கோம் விலகல்!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இந்தியக் குழுவின் திட்டத் தலைவர் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாகக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வன ஒலிம்பிக் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவின் தலைவராக முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பாரிஸ் ஒலிம்பிக்குக்குச் செல்லும் இந்திய வீரர்கள் குழுவுக்கான தலைவர் பொறுப்பிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பிடி உஷா, பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மேரி கோம் கடிதம் மூலம் கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், “நாட்டுக்காக அனைத்து வகையிலும் சேவை செய்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த வகையில் இந்த பொறுப்பில் செயல்பட நான் தயாராகவும் இருந்தேன். இருந்தாலும், இந்த பொறுப்பில் என்னால் தொடர முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடி உஷா, “லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார் மேரி கோம். இந்த பொறுப்பிலிருந்து பின் வாங்குவது சங்கடமாக இருக்கிறது. ஆனால், எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களுக்கு உற்சாகம் கொடுப்பேன். அவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தனிப்பட்ட காரணங்களுக்காக மேரி கோம் இந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அது வருத்தம் தருகிறது. விரைவில் அந்த பொறுப்பில் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார். மேரி கோமின் முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். அவருக்கு எனது ஆதரவு உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளேன். அவரது முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டுகிறேன்” என பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இது வரை 40-க்கும் அதிகமான இந்திய வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Mary Kom resigns from the post of president for India in Paris Olympics!
ShareTweetSendShare
Previous Post

எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

2024 ஐபிஎல் : லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் பேட்டிங்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies