மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் !
Jun 26, 2025, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் !

Web Desk by Web Desk
Apr 13, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 1930 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் தேதி பிறந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவரின் தந்தை ஒரு நாட்டுப் புறக் கவிஞர்.

பல கலைஞர்களைப் போலவே வறுமை இவரையும் விட்டு வைக்கவில்லை. வறுமையின் காரணமாக, கிடைக்கும் தொழிலை செய்து வந்த கல்யாணசுந்தரம் தன் நண்பர்களுடன் விவசாயச் சங்கத்தைத் தஞ்சையில் கட்டியெழுப்பினார்.

கலை மீது கொண்டிருந்த அவரது ஆர்வம் அவரை சென்னைக்கு வரவைத்தது. இவர் தன் கவிதைகள் மூலம் நூற்றாண்டுகளைக் கடந்த பகுத்தறிவு, சமத்துவக் கருத்துகளை விதைத்தவர்

சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்த இவரின் பாடல்களில் கிராமிய மணம் வீசியது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டு வந்தது.

இவர் 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராக பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டு தான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.

இவர் ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். 1959 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன.

இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ இவரின் ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

இவர் எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். அதேபோல் இவர் பாடல் பாடுவதிலும் வல்லவர்.

பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. அதேபோல் மக்கள் கவிஞர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இவரது நினைவைப் போற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil NaduPattukkottai Kalyanasundaramtamil poet
ShareTweetSendShare
Previous Post

சென்னை – மொரீஷியஸ் விமான சேவை தொடக்கம்

Next Post

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் !

Related News

நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!

900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு – நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!

சேலத்தில் ருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை – சசிதரூர்

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக 4,770 மரக்கன்றுகள் நட வேண்டும் – தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்தும் மருத்துவ உதவியாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு – திமுகவினர் காரணம் என தந்தை குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை அருகே இளைஞர் வெட்டிக்கொலை – 7 தனிப்படைகள் அமைப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – ஆ.ராசா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பது சகஜமான விஷயம்தான் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

திருப்பத்தூரில் முதல்வர் வருகைக்காக மின்சாரம் திருட்டு!

நான் அவன் இல்லை – காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜராகி விளக்கம்!

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு – இருவர் கைது!

இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies