சித்திரை கனி காணுதல் என்றால் என்ன?
Mar 15, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சித்திரை கனி காணுதல் என்றால் என்ன?

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சித்திரை மாதத்தின் முதல் நாளில் தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது . கேரளாவில் இந்நாளை விஷு என்று கொண்டாடுகிறார்கள் .

விஷு கனி காணும் நன்னாளாக  கொண்டாடப் படும் இந்த நாளில் , ஒரு தாம்பாளத்தில், மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை, ஆப்பிள், ஆரஞ்சு முதலான பழங்களை வரிசையாக வைப்பார்கள்.

பாக்கு, பழம், வெள்ளி, தங்கம், மஞ்சள், குங்குமம், பணம் இன்னொரு தாம்பளத்தில் அரிசி, கல் உப்பு, பருப்பு,மஞ்சள், வெல்லம் என ஒற்றைப் படையில் 5 பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும்

அதில் சில்லறைக்காசுகள்,  பூ, மற்றும் தங்க நகைகளை அடுக்கி வைப்பார்கள். முதல்நாளே, வீட்டுப் பூஜையறையை சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரித்து, பழங்களும் காசுகளும் கண்ணாடியும் பூக்களும் ,தங்க நகைகளும் கொண்ட தாம்பாளத்தை பூஜையறையில் கோலமிட்ட பலகையின் மீது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி முன் இரு புறமும் குத்து விளக்கேற்றி வைத்துவிடுவார்கள்.

புத்தாண்டு அன்று அதிகாலை கண்விழித்ததும்  பூஜை அறையில் வைத்த கண்ணாடியில் தன் முகம் பார்த்து விட்ட ,தாம்பாளத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பழங்களையும்  பணத்தையும்  கண்ணாடியையும் ,தங்க நகைகளையும் கண்டு தரிசனம் செய்வார்கள்

சித்திரை விஷூ  நன்னாளில், இப்படி கண்விழித்துப் பார்ப்பதால், கனிகளைப் போல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நம் முகத்தை நாமே கண்ணாடியில் பார்ப்பதால், நம்மைச் சுற்றியுள்ள திருஷ்டி அனைத்தும் விலகிவிடும்.

தங்கம் மற்றும் காசுகளைப் பார்ப்பதால், சகல ஐஸ்வர்யங்களும் நம் இல்லத்தில் தங்கும் என்பது ஐதீகம். ஒருகாலத்தில் கேரளாவில் மட்டுமே இருந்து வந்த இந்த சம்பிரதாயம் இப்போது தமிழகத்திலும் வந்துவிட்டது   தமிழ்ப் புத்தாண்டு நாளில் கனி காணுதல் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பது சாஸ்திரம் .

கை நீட்டம் என்றும் இந்த கனி காணுதலை சொல்லுவார்கள் . அதேபோல புத்தாண்டு அன்று மதிய உணவில் வெல்லம் மாங்காய் -வேப்பம்பூ பச்சடி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள், சிறுவர், சிறுமிகள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவார்கள்.

அப்போது பெரியவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பேரன் பேத்திகளுக்கும், உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் போன்றவருக்கு வசதிக்கேற்ப தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், காய்கறிகள் கொன்றை பூ மலர்கள் அரிசி உள்ளிட்டவற்றை கைநீட்டமாக வழங்குவார்கள்.

ஒருவருக்கொருவர் காசு பணங்களை பரிமாறிக் கொள்ளும் பழக்கமாகவும் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது என்பதே இதன் சிறப்பாகும். இப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் மங்கலம் பொங்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும்.

Tags: Tamil new yearchithiraispirituals
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

பிரதமர் மோடியின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் தமிழகம் அடைந்த பலன்கள் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies