சித்திரை கனி காணுதல் என்றால் என்ன?
Jul 24, 2025, 05:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சித்திரை கனி காணுதல் என்றால் என்ன?

Web Desk by Web Desk
Apr 13, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சித்திரை மாதத்தின் முதல் நாளில் தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது . கேரளாவில் இந்நாளை விஷு என்று கொண்டாடுகிறார்கள் .

விஷு கனி காணும் நன்னாளாக  கொண்டாடப் படும் இந்த நாளில் , ஒரு தாம்பாளத்தில், மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை, ஆப்பிள், ஆரஞ்சு முதலான பழங்களை வரிசையாக வைப்பார்கள்.

பாக்கு, பழம், வெள்ளி, தங்கம், மஞ்சள், குங்குமம், பணம் இன்னொரு தாம்பளத்தில் அரிசி, கல் உப்பு, பருப்பு,மஞ்சள், வெல்லம் என ஒற்றைப் படையில் 5 பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும்

அதில் சில்லறைக்காசுகள்,  பூ, மற்றும் தங்க நகைகளை அடுக்கி வைப்பார்கள். முதல்நாளே, வீட்டுப் பூஜையறையை சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரித்து, பழங்களும் காசுகளும் கண்ணாடியும் பூக்களும் ,தங்க நகைகளும் கொண்ட தாம்பாளத்தை பூஜையறையில் கோலமிட்ட பலகையின் மீது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி முன் இரு புறமும் குத்து விளக்கேற்றி வைத்துவிடுவார்கள்.

புத்தாண்டு அன்று அதிகாலை கண்விழித்ததும்  பூஜை அறையில் வைத்த கண்ணாடியில் தன் முகம் பார்த்து விட்ட ,தாம்பாளத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பழங்களையும்  பணத்தையும்  கண்ணாடியையும் ,தங்க நகைகளையும் கண்டு தரிசனம் செய்வார்கள்

சித்திரை விஷூ  நன்னாளில், இப்படி கண்விழித்துப் பார்ப்பதால், கனிகளைப் போல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நம் முகத்தை நாமே கண்ணாடியில் பார்ப்பதால், நம்மைச் சுற்றியுள்ள திருஷ்டி அனைத்தும் விலகிவிடும்.

தங்கம் மற்றும் காசுகளைப் பார்ப்பதால், சகல ஐஸ்வர்யங்களும் நம் இல்லத்தில் தங்கும் என்பது ஐதீகம். ஒருகாலத்தில் கேரளாவில் மட்டுமே இருந்து வந்த இந்த சம்பிரதாயம் இப்போது தமிழகத்திலும் வந்துவிட்டது   தமிழ்ப் புத்தாண்டு நாளில் கனி காணுதல் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பது சாஸ்திரம் .

கை நீட்டம் என்றும் இந்த கனி காணுதலை சொல்லுவார்கள் . அதேபோல புத்தாண்டு அன்று மதிய உணவில் வெல்லம் மாங்காய் -வேப்பம்பூ பச்சடி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள், சிறுவர், சிறுமிகள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவார்கள்.

அப்போது பெரியவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பேரன் பேத்திகளுக்கும், உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் போன்றவருக்கு வசதிக்கேற்ப தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், காய்கறிகள் கொன்றை பூ மலர்கள் அரிசி உள்ளிட்டவற்றை கைநீட்டமாக வழங்குவார்கள்.

ஒருவருக்கொருவர் காசு பணங்களை பரிமாறிக் கொள்ளும் பழக்கமாகவும் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது என்பதே இதன் சிறப்பாகும். இப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் மங்கலம் பொங்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும்.

Tags: spiritualsTamil new yearchithirai
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

பிரதமர் மோடியின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் தமிழகம் அடைந்த பலன்கள் !

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies