இளம் வாக்காளர்கள் ஓட்டுக்காக கிரிக்கெட் மைதானமா ? - இளைஞர்கள் கேள்வி!
Jul 23, 2025, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளம் வாக்காளர்கள் ஓட்டுக்காக கிரிக்கெட் மைதானமா ? – இளைஞர்கள் கேள்வி!

Web Desk by Web Desk
Apr 13, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் தமிழகத்தில் ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அதாவது இந்த வாக்காளர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள். அதிலும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

இந்த இளம் வாக்காளர்களின் வாக்குகளை மொத்தமாக பெற வேண்டும் என்பதில் பல்வேறு கட்சிகள் இடையே தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளும் இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களை கையில் எடுத்துள்ளன.

ஒரு கோடி இளம் வாக்காளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப சமூக வலைதள பக்கங்களில் இந்த கட்சிகளும் பதிவுகளை தினமும் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதன் பின்னணியில் இளம் வாக்காளர்களை கவருவதற்கான வியூகம் இருப்பதாக தகவல் வெளியானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பகுதியில் சுற்றுப்பயணம் செய்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கோவை இளைஞர்களுக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருப்பதால் நவீன கிரிக்கெட் மைதானம் தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார். அந்த பதிவை கண்ட சில மணி நேரத்துக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தி.மு.க.வில் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் பதிவிடும்  ஒவ்வொரு தகவலும் திராவிட சித்தாந்தத்தை தாங்கி நிற்கும் வகையில் உள்ளன. இப்படி ஏதேதோ செய்து இளைஞர்களை தன்வசப்படுத்தப் பாடுபடுகிறது திமுக.

ஆனால் இதற்கு முன்னதாக கொடுத்த வாக்குறுதியே இன்னும் செய்து முடிக்கவில்லை. அதேபோல் தற்போது கிரிக்கெட் மைதானம் கட்டி தருகிறோம் என்று திமுக கூறியதற்கு, கால்பந்து விளையாட்டு பிரியர்கள் முதலில் ஒரு கால்பந்து மைதானத்தை சரியாக கட்டிக்கொடுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சிலர், தேர்தல் நெருங்கி வருவதாலும், ஐபிஎல் போட்டி நடைபெறுவதாலும் கிரிக்கெட் ரசிகர்களின் ஓட்டுக்காக இப்படி கூறுவதாக விமர்சித்து வருகின்றனர்.

Tags: parliment electioncricket ground for young votersTamil Nadu
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் தமிழகம் அடைந்த பலன்கள் !

Next Post

ரசிகர்களே ரெடியா ? – தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு !

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies