அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Aug 20, 2025, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 14, 2024, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான் எனப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ் கட்சி அவருக்கு கொடுக்காத மரியாதையை நாங்கள் கொடுத்தோம். அவரை அவமதிக்கும் வகையிலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகள் செயல்பட்டு உள்ளன. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் காரணமாகவே, ஏழைத்தாயின் மகனாகிய மோடி, 3வது முறை உங்களுக்கு சேவை செய்ய உங்களின் ஆசி வேண்டி வந்துள்ளேன். ஆதிவாசிகளின் பங்களிப்பை காங்கிரஸ் எப்போதும் அங்கீகரித்தது கிடையாது. பழங்குடியினரை பாஜக அரசு பெருமைப்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எப்போதும்  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்தது, நாங்கள் அவரை கவுரவித்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமர் ஆனால் நாடு எரியும் என காங்கிரஸ் அரச குடும்பம் மிரட்டுகிறது. 2014, 19 ல் இதேபோல் தான் செய்தனர். அப்படி எதுவும் நடந்ததா? இன்று நாட்டில் நெருப்பு இல்லை. அவர்கள் உள்ளங்களில் தான் பொறாமை இருக்கிறது. பிரிவினை மற்றும் அச்சுறுத்தல் அரசியலில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டு உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான்.

வரலாற்று உண்மைகளை திரித்ததும் அக்கட்சி தான். உலகத்தின் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் பார்த்து கொண்டு உள்ளீர்கள். உலகில் உள்ள அனைவரும் அச்சத்தின் நிழலில் வாழ்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ, என்ன பிரச்னை வருமோ என்று நடுங்கிக் கொண்டு உள்ளனர்.

அத்தகைய உலகத்திற்கு வலிமையான மற்றும் சக்தியான இந்தியா தேவைப்படுகிறது. இந்தியாவை நிலைநிறுத்த வலிமையான அரசு தேவை. உங்களின் ஓட்டே வலிமையான இந்தியாவை கட்டமைக்கும். இண்டி கூட்டணி கட்சிகள், அவர்களின் தேர்தல் அறிக்கை காரணமாக குழம்பி போயுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை திவாலாக்கி விடும்.

நாட்டை பாதுகாக்க அணு ஆயுதங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் பாதுகாக்க முடியாது. ஆனால், அதனை ஒழித்துக்கட்ட காங்கிரஸ் முயற்சி செய்கிறது. நாட்டை அபாய நிலையில் தள்ள அக்கட்சி விரும்புகிறது. நாட்டை எந்த திசையில் இயக்க வேண்டும் என முடிவெடுக்க முடியாமல் ‛ இண்டி’ கூட்டணி குழம்பி வருகிறது. எனது 10 ஆண்டு கால ஆட்சி வெறும் டிரைலர் தான் எனத் தெரிவித்தார்.

Tags: PM ModiCongress insulted Ambedkar: Prime Minister Modi accused!
ShareTweetSendShare
Previous Post

கோவையின் வளர்ச்சியை முடக்கி வைத்த திமுகவை புறக்கணிப்போம் : அண்ணாமலை

Next Post

கர்நாடகாவில் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்த நபர் உயிரிழப்பு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies