பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் தேர்தல் மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக இன்றளவும் குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனக்கூறிய பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர். பிறகு அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சிலர் வாக்களித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட பகுதியில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க செல்லவில்லை.

கடலூர் மாவட்டம், கச்சிபெருமாநத்தம் பகுதியில் உள்ள கிராம மக்கள், தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்தனர். மொத்தம் 921 வாக்காளர்கள் உள்ள இப்பகுதியில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்ன அய்யன்குளம் பகுதியில் கழிவறை, சாலைகள், உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதரக்கூறி பலமுறை தெரிவித்தும், இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் , சவேரியார்பட்டினம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த முயற்சியில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மொத்தமாக ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டு பகுதி மக்கள் நீண்ட நாட்களாக மருத்துவ கழிவு தொழிற்சாலையை அகற்ற கோரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வாக்களிக்க செல்லவில்லை.

Tags: Election boycott in various districts!
ShareTweetSendShare
Previous Post

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

Next Post

பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்புக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் விண்ணப்பம் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies