அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்!
Sep 11, 2025, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்!

Web Desk by Web Desk
Apr 22, 2024, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுட்டெரிக்கும் வெயில் ஒருபக்கம் அதிக வெப்பத்தை வீசுகின்ற நேரத்தில் கேரளாவில் பறவைக் காய்ச்சல் என்ற செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து இறந்தன. அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது அவை இறந்து போனதற்கு காரணம் எச்5என்1 பறவை காய்ச்சல் என்று கண்டறியப் பட்டது.

இதையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நோய் தொற்று உள்ள கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல், அதனுடைய இறைச்சிகள் மற்றும் முட்டைகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பறவை காய்ச்சல் பரவும் வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன . பறவைக் காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று நோய்.

இது கால்நடைகள் , பறவைகள் ,விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களையும் தாக்கக் கூடியது. H5N 1 வகை தொற்று பறவைகளைத் தாக்க கூடிய கொடியவகை வைரஸ் ஆகும்.

உலக சுகாதார மையத்தால் 1997ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட H 5N 1 வைரஸ் மனிதர்களை எளிதில் தாக்கும் வைரஸ் ஆகும்.

முதலில் கோழிகளுக்கு வரும் இந்த நோய் பிறகு மற்ற பிராணிகளுக்கு பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட கோழியின் மலம், நாசி சுரப்பு மற்றும் வாய் அல்லது கண்களில் இருந்து சுரக்கும் நீர் மூலமாக நேரடியாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுகிறது.

நீண்ட நாள் வாழக் கூடிய இந்த H 5N 1 வைரஸ் அடுத்தவருக்கு எளிதில் பரவக் கூடியது. இருமல், வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்சனை, மூச்சு திணறல், நாட்பட்ட காய்ச்சல்,தொடர் தலைவலி தசைகளில் வலி, திடீரென்று உடல்சோர்வு, விடாமல் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி ஆகியவையே பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென் பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுக்க, தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Threatening bird flu!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

இ.பி.எஃப்.ஓ-வில் 7.8 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைப்பு!

Related News

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவு – நாளை இறுதிச்சடங்கு!

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

இன்றைய தங்கம் விலை!

எமர்ஜென்சி காலத்தின் தீவிர களச் செயற்பாட்டாளர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies