அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2024, 07:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுட்டெரிக்கும் வெயில் ஒருபக்கம் அதிக வெப்பத்தை வீசுகின்ற நேரத்தில் கேரளாவில் பறவைக் காய்ச்சல் என்ற செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து இறந்தன. அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது அவை இறந்து போனதற்கு காரணம் எச்5என்1 பறவை காய்ச்சல் என்று கண்டறியப் பட்டது.

இதையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நோய் தொற்று உள்ள கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல், அதனுடைய இறைச்சிகள் மற்றும் முட்டைகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பறவை காய்ச்சல் பரவும் வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன . பறவைக் காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று நோய்.

இது கால்நடைகள் , பறவைகள் ,விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களையும் தாக்கக் கூடியது. H5N 1 வகை தொற்று பறவைகளைத் தாக்க கூடிய கொடியவகை வைரஸ் ஆகும்.

உலக சுகாதார மையத்தால் 1997ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட H 5N 1 வைரஸ் மனிதர்களை எளிதில் தாக்கும் வைரஸ் ஆகும்.

முதலில் கோழிகளுக்கு வரும் இந்த நோய் பிறகு மற்ற பிராணிகளுக்கு பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட கோழியின் மலம், நாசி சுரப்பு மற்றும் வாய் அல்லது கண்களில் இருந்து சுரக்கும் நீர் மூலமாக நேரடியாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுகிறது.

நீண்ட நாள் வாழக் கூடிய இந்த H 5N 1 வைரஸ் அடுத்தவருக்கு எளிதில் பரவக் கூடியது. இருமல், வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்சனை, மூச்சு திணறல், நாட்பட்ட காய்ச்சல்,தொடர் தலைவலி தசைகளில் வலி, திடீரென்று உடல்சோர்வு, விடாமல் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி ஆகியவையே பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென் பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுக்க, தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Threatening bird flu!
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

இ.பி.எஃப்.ஓ-வில் 7.8 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies