அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்!
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2024, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுட்டெரிக்கும் வெயில் ஒருபக்கம் அதிக வெப்பத்தை வீசுகின்ற நேரத்தில் கேரளாவில் பறவைக் காய்ச்சல் என்ற செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து இறந்தன. அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது அவை இறந்து போனதற்கு காரணம் எச்5என்1 பறவை காய்ச்சல் என்று கண்டறியப் பட்டது.

இதையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நோய் தொற்று உள்ள கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல், அதனுடைய இறைச்சிகள் மற்றும் முட்டைகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பறவை காய்ச்சல் பரவும் வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன . பறவைக் காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று நோய்.

இது கால்நடைகள் , பறவைகள் ,விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களையும் தாக்கக் கூடியது. H5N 1 வகை தொற்று பறவைகளைத் தாக்க கூடிய கொடியவகை வைரஸ் ஆகும்.

உலக சுகாதார மையத்தால் 1997ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட H 5N 1 வைரஸ் மனிதர்களை எளிதில் தாக்கும் வைரஸ் ஆகும்.

முதலில் கோழிகளுக்கு வரும் இந்த நோய் பிறகு மற்ற பிராணிகளுக்கு பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட கோழியின் மலம், நாசி சுரப்பு மற்றும் வாய் அல்லது கண்களில் இருந்து சுரக்கும் நீர் மூலமாக நேரடியாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுகிறது.

நீண்ட நாள் வாழக் கூடிய இந்த H 5N 1 வைரஸ் அடுத்தவருக்கு எளிதில் பரவக் கூடியது. இருமல், வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்சனை, மூச்சு திணறல், நாட்பட்ட காய்ச்சல்,தொடர் தலைவலி தசைகளில் வலி, திடீரென்று உடல்சோர்வு, விடாமல் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி ஆகியவையே பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென் பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுக்க, தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Threatening bird flu!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

இ.பி.எஃப்.ஓ-வில் 7.8 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைப்பு!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies