பாஜக எம்பி போட்டியின்றி தேர்வானது எப்படி?
Mar 15, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக எம்பி போட்டியின்றி தேர்வானது எப்படி?

Murugesan M by Murugesan M
Apr 22, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வெற்றி பெற்றது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வது மக்களவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மூன்றாவது முறையாக மோடியே பிரதமராவார் என்று எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பெரும்பாலான மக்களிடையே எழுந்திருக்கும் நிலையில், 2024 மக்களவை தேர்தலில் முதல் வெற்றியை பாஜக கைப்பற்றி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தில் வரும் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு குஜராத்தில் முதல் வெற்றி போட்டி இன்றி கிடைத்திருப்பது அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

சூரத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பனி தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தாக்கல் நிராகரிக்கப் பட்டதால் , பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

‘ பாஜகவின் விருப்பத்தின் பெயரிலேயே காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டுள்ளது . இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்’ என குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சகதிசிங் கோஹில் தெரிவித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டது என்பது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் ஒருவேளை தமது வேட்பு மனு நிராகரிக்கப் பட்டால் என்ன செய்வது என யோசித்த காங்கிரஸ் வேட்பாளர் தமக்குப் பதிலாக சுரேஷ் பத்சலா என்பவரையும் போட்டியிட வைத்துள்ளார்.

இதே தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பியாரேலால் பாரதி மற்றும் 7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில் காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்புமனுக்களிலும் போலியாக கையெழுத்திடப்பட்டு உள்ளதாகவும், பிரமாண பத்திரத்தில் உண்மைத் தன்மை இல்லை என்ற காரணங்களால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பனி மற்றும் அவரே போட்டியிட சொன்ன சுரேஷ் பத்சலா ஆகியோரின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட மற்ற 8 வேட்பாளர்களும் ஒரே நாளில் தங்கள் வேட்பு மனுவைத் திரும்ப பெற்றனர்.

இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிட்ட முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றிப் பெற்றிருக்கிறார். இது குறித்து முறையான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலை வாழ்த்தி குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு சூரத் முதல் தாமரையை வழங்கி உள்ளதாக பதிவிட்டு உள்ளார்.

முகேஷ் தலாலின் இந்த வெற்றி மூலம் இந்த மக்களவை தேர்தலில் முதலில் தேர்வு செய்யப்பட்ட எம்பி என்ற பெருமையை பெற உள்ளார்.

 

Tags: bjpbjp mpHow did the BJP MP get elected unopposed?
ShareTweetSendShare
Previous Post

ஒன்றரை கோடி பேர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம்!

Next Post

மாலத்தீவு தேர்தல் – எதிர்பாராத திருப்பம்!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies