பா.ஜ., ஆட்சியில் 44 ஆயிரம் கி.மீ., தூரப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும். அந்தளவுக்கு ரயில்வே தரம் உயர்த்தப்படும். இது மோடியின் கியாரண்டி” என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில்,
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாற்றங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும்.
அந்தளவுக்கு ரயில்வே துறையின் தரம் உயர்த்தப்படும். இது மோடியின் கியாரண்டி.
2014 முதல் 2024 வரை, 31 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 2004 முதல் 2014 வரை 5 ஆயிரம் கி.மீ., தூரம் வரை மட்டுமே ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டன. ஆனால், பா.ஜ., ஆட்சியில் 44 ஆயிரம் கி.மீ., தூரப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 32 ஆயிரம் ரயில் பெட்டிகள் மட்டுமே உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட நிலையில், பா.ஜ., ஆட்சியில் 54 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வே துறை முக்கிய பங்கு அளிக்கும் எனத் தெரிவித்தார்.