நாகையில் இயங்கி வந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசரகதியில் இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம், அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வந்தது.
இந்நிலையில் இம்மருத்துவமனை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்துக்கு அவசரகதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து வசதி ஏதுமின்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.