தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக சேலம், மற்றும் ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், கரூர் பரமத்தி, வேலூர், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும், அதேபோல், உள் மாவட்டங்களில், இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 20 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.