விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் நீதிமன்றமன்றம் தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கண்ணாரம்பட்டு கிராமத்தில், கடந்த 2005-ம் ஆண்டு புறம்போக்கு இடம் தொடர்பான பிரச்சனையில் குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இதில் தொடர்புடைய 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், அவர்களை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளாகி உயிரிழந்த 6 பேரை தவிர, மற்ற 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் தொடர்புடைய 20 பேருக்கு, 19 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.