ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் விதமாக திமுக செயல்படுகிறது! - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Mar 23, 2026, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் விதமாக திமுக செயல்படுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற திமுகவைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டே, ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர்.

திமுக தலைமைக்கும், அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெருக்கமான நபராக அறியப்படும் இந்த பாம்பு கார்த்திக், ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் என்று சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாகவும், அதனைத் தட்டிக் கேட்ட வழக்கறிஞர்  மாரிசெல்வம் அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிகிறது.

கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும், மாதம் 3.5 டன் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு, இந்தப் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில், துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருவது, கடத்தல்காரர்களின் பின்புலத்தைக் காட்டுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற திமுகவைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டே, ரேஷன் அரிசி… pic.twitter.com/Ln6HyViP1Y

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 24, 2024

ஆளுங்கட்சி என்பதால், காவல்துறையினரோ, தமிழக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும்போது, திமுகவினர் ரேஷன் அரிசியைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து கொழுப்பது கீழ்த்தரமானது.

ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும்.

உடனடியாக, இந்த பாம்பு கார்த்திக் என்ற நபர் உள்ளிட்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் விதமாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பின்மையை உருவாக்கியிருக்கும் தூத்துக்குடி மாவட்ட திமுகவுக்கு வன்மையான கண்டனங்களை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMK is working to encourage ration rice smuggling gangs! - Annamalai accusation!
ShareTweetSendShare
Previous Post

மணல் கொள்ளை ஊழலில் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு தொடர்பு : அமித் ஷா

Next Post

பணிந்த பதஞ்சலி கடிவாளம் போட்ட உச்சநீதிமன்றம்!

Related News

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

தவெக-வை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies