கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்டத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. எனவே, அத்தியாவசிய தேவையின்றி, வெளியில் செல்லக்கூடாது. குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.