புதுக்கோட்டையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டியா வயல் பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மர்ம நபர்கள் கலைவாணி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.
அதேபோல் மேல முத்து உடையான் பட்டியை சேர்ந்த கவிதா என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் விக்னேஷ் மற்றும் கொடியரசன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.