கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கலிடும் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கொல்லங்கோடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறுவது வழக்கம்.
இதனைத்தொடர்ந்து நேர்ச்சை நடத்தப்படும் குழந்தைகளின் பெற்றோர் சித்திரை பத்தாம் நாள் கோயிலில் பொங்கலிட்டு வழிபடுவர்.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கலிடும் விழாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர்.