மயிலாடுதுறையில் சொத்துக்களை அபகரித்து விட்டு மகன் கொலை மிரட்டல் விடுப்பதாக முதியவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருஇந்தளூரில் உள்ள லூர்துநகரில் கணேசன், ராஜபாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு மதிவாணன், ராஜூ ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இளைய மகனான் மதிவாணன் பெற்றோரை அடித்து துன்புருத்தி வந்துள்ளார். இதனால் மூத்த மகனான் ராஜூ வீட்டில் வயதான தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் முதியவர் கணேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது இளைய மகன் மதிவாணன் தங்களது சொத்துக்களை அபகரித்துவிட்டு கொலைமிரட்டல் விடுப்பதாகவும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது