பழனி தண்டாயுதபாணி கோயில் யானை கஸ்தூரி, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பழனியில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், கோயில் யானையை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்திலுள்ள குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கோயில் யானை கஸ்தூரி நீந்தி விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குளத்தில், கஸ்தூரி யானை படுத்து, நீந்தி விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், கோயில் யானைக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் பழங்களை உணவாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.