மயிலாடுதுறையில் அர்ச்சகரை தரக்குறைவாக பேசிய கோவில் அதிகாரியை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது.
அப்போது, கோயிலில் போடப்படும் பாடலால் இடையூறு ஏற்படுவதாக கூறி, அதிகாரி ஒருவர் மைக்செட்டை ஆப் செய்துள்ளார். பூஜை பொருட்களை எடுத்து வீசி எறிந்துள்ளார்.
மேலும், கோயில் அர்ச்சகரை தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் இந்து சமய இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.