திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொர்டபாக சுயேட்சை வேட்பாளர் ராகவன் தொடரந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு சட்டவிரோதபண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.