ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலுள்ள திரிபுரசுந்தரி பத்திரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை ஒட்டி, நான்காம் கால யாகசாலை பூஜையுடன் விக்னேஸ்வர பூஜையும், கோ பூஜையும் நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்ட புனித நீர், கும்பத்தில் ஊற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு தயிர், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.