தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வதைத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதால் மே 2-ம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதேபோல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் அந்த மாநிலங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.