மே தினம் கொண்டாட்டம் ஏன்?
Jul 25, 2025, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மே தினம் கொண்டாட்டம் ஏன்?

Web Desk by Web Desk
Apr 30, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மே 1ம் தேதியான இன்று உலக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவது ஏன்? அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

19 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் பட்டனர். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘தொழிலாளர்கள் கூட்டமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பின் சார்பில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து 1886ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அன்றைய தினம் அமெரிக்கா முழுவதும் 3லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதும் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. தொழிற்சங்க தலைவர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

தொழிலாளர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல், 1890-ம் ஆண்டு அவர்கள் கோரிக்கையான 8 மணி நேர வேலைக்கு அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. இது தான் மே தினம் உருவான வரலாறு.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை கோரிக்கையை நினைவு கூறும் விதத்திலும், நாடு, இனம்,மொழி இவற்றைக் கடந்து, அமெரிக்காவில் நடந்து போராட்டத்தின் போது தொழிலாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் மே ஒன்றாம் தேதி உலகெங்கிலும் உழைப்பாளர்கள் நாளாக கொண்டாடப் படுகிறது. 1890ஆம் ஆண்டிலேயே சில நாடுகளில் உழைப்பாளர் நாள் கொண்டாடப்பட்டது.

‘இரண்டாம் உலகம் , என்ற பெயரில் சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு 1889-ல் பாரிஸ் மாநகரில் நடைபெற்றது.

அதில் சிகாகோ தொழிலாளர்கள் போராட்டத்தைப் போற்றும் வகையில் மே மாதம் ஒன்றாம் தேதியை உழைப்பாளர் நாளைக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை ரேமண்ட் லவிக்னே முன்மொழிந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

இதன் பிறகே உலக நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் அனைத்தும் இந்த நாளை உழைப்பாளர் தினமாக முறைப்படி கொண்டாடின.

இன்று உலகமெங்கும் ஏறத்தாழ 80 நாடுகளுக்கு மேல் மே ஆறாம் தேதியை உழைப்பாளர்கள் தினமாக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில், முதல் தொழிலாளர் தினம் 1923 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. தொழிலாளர் கிசான் கட்சிதான் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் மே தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

திருவல்லி கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி என்பவர் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்கார வேலர் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழிலாளர் கிசான் கட்சியின் தலைவரரும் சிறந்த சீர்திருத்த வாதியுமான சிங்காரவேலர் உயர்நீதிமன்றம் அருகே கடற்கரையில் மே தினத்தைக் கொடி ஏற்றி கொண்டாடினார்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் , அப்போதே பாரத நாடு விடுதலை அடைந்ததாக எண்ணி, இந்திய தேசியக் கொடி ஏற்றி , பின்னர் சிகப்பு வண்ணக் கொடி ஏற்றினார்.

சிங்காரவேலர் கோடி ஏற்றி மே தின உரை யாற்றிய இடத்தில் பிரபல சிற்பி தேவிபிரசாத் ராய் சௌத்ரியால் கலைவண்ணத்தில் உருவான உழைப்பாளர் சிலை 1956ம் ஆண்டு குடியரசு நாளில் காமராசரால் நிறுவப் பட்டது.

மே தினத்தைப் போற்றும் விதமாக முன்னாள் பிரதமர் வி.பி.சிங், அந்நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தார் .

இந்தியா விடுதலை அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே , ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற பெயரில் இந்தியாவின் முதல் தொழில் சங்கம் தொடங்கப் பட்டது.

தமிழ்த் தென்றல் என்று போற்றப்படும் திரு.வி.க, தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உரிய விதிமுறைகளுடன் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை 1918 ஏப்ரல் 27ம் தேதி சென்னையில் உருவாக்கினார். இந்தியாவில் தொழிலாளர்கள் உரிமைகள் காக்க தொடங்கப் பட்ட எல்லா தொழில் சங்கங்களுக்கும் இதுதான் முன்னோடி சங்கம்.

இப்படி இந்திய உழைப்பாளர்களுக்காக போராடிய முன்னோர்களை நினைவு கொள்வதோடு , அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

Tags: Why May Day Celebration?
ShareTweetSendShare
Previous Post

கோடையின் கொடுமை தணிக்க கொடுப்போம் நீர்மோர்! – அண்ணாமலை

Next Post

குரு பரிகாரக் கோயில்கள்!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies