மே தினம் கொண்டாட்டம் ஏன்?
Apr 30, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மே தினம் கொண்டாட்டம் ஏன்?

Murugesan M by Murugesan M
Apr 30, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மே 1ம் தேதியான இன்று உலக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவது ஏன்? அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

19 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் பட்டனர். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘தொழிலாளர்கள் கூட்டமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பின் சார்பில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து 1886ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அன்றைய தினம் அமெரிக்கா முழுவதும் 3லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதும் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. தொழிற்சங்க தலைவர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

தொழிலாளர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல், 1890-ம் ஆண்டு அவர்கள் கோரிக்கையான 8 மணி நேர வேலைக்கு அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. இது தான் மே தினம் உருவான வரலாறு.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை கோரிக்கையை நினைவு கூறும் விதத்திலும், நாடு, இனம்,மொழி இவற்றைக் கடந்து, அமெரிக்காவில் நடந்து போராட்டத்தின் போது தொழிலாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் மே ஒன்றாம் தேதி உலகெங்கிலும் உழைப்பாளர்கள் நாளாக கொண்டாடப் படுகிறது. 1890ஆம் ஆண்டிலேயே சில நாடுகளில் உழைப்பாளர் நாள் கொண்டாடப்பட்டது.

‘இரண்டாம் உலகம் , என்ற பெயரில் சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு 1889-ல் பாரிஸ் மாநகரில் நடைபெற்றது.

அதில் சிகாகோ தொழிலாளர்கள் போராட்டத்தைப் போற்றும் வகையில் மே மாதம் ஒன்றாம் தேதியை உழைப்பாளர் நாளைக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை ரேமண்ட் லவிக்னே முன்மொழிந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

இதன் பிறகே உலக நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் அனைத்தும் இந்த நாளை உழைப்பாளர் தினமாக முறைப்படி கொண்டாடின.

இன்று உலகமெங்கும் ஏறத்தாழ 80 நாடுகளுக்கு மேல் மே ஆறாம் தேதியை உழைப்பாளர்கள் தினமாக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில், முதல் தொழிலாளர் தினம் 1923 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. தொழிலாளர் கிசான் கட்சிதான் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் மே தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

திருவல்லி கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி என்பவர் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்கார வேலர் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழிலாளர் கிசான் கட்சியின் தலைவரரும் சிறந்த சீர்திருத்த வாதியுமான சிங்காரவேலர் உயர்நீதிமன்றம் அருகே கடற்கரையில் மே தினத்தைக் கொடி ஏற்றி கொண்டாடினார்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் , அப்போதே பாரத நாடு விடுதலை அடைந்ததாக எண்ணி, இந்திய தேசியக் கொடி ஏற்றி , பின்னர் சிகப்பு வண்ணக் கொடி ஏற்றினார்.

சிங்காரவேலர் கோடி ஏற்றி மே தின உரை யாற்றிய இடத்தில் பிரபல சிற்பி தேவிபிரசாத் ராய் சௌத்ரியால் கலைவண்ணத்தில் உருவான உழைப்பாளர் சிலை 1956ம் ஆண்டு குடியரசு நாளில் காமராசரால் நிறுவப் பட்டது.

மே தினத்தைப் போற்றும் விதமாக முன்னாள் பிரதமர் வி.பி.சிங், அந்நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தார் .

இந்தியா விடுதலை அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே , ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற பெயரில் இந்தியாவின் முதல் தொழில் சங்கம் தொடங்கப் பட்டது.

தமிழ்த் தென்றல் என்று போற்றப்படும் திரு.வி.க, தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உரிய விதிமுறைகளுடன் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை 1918 ஏப்ரல் 27ம் தேதி சென்னையில் உருவாக்கினார். இந்தியாவில் தொழிலாளர்கள் உரிமைகள் காக்க தொடங்கப் பட்ட எல்லா தொழில் சங்கங்களுக்கும் இதுதான் முன்னோடி சங்கம்.

இப்படி இந்திய உழைப்பாளர்களுக்காக போராடிய முன்னோர்களை நினைவு கொள்வதோடு , அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

Tags: Why May Day Celebration?
ShareTweetSendShare
Previous Post

கோடையின் கொடுமை தணிக்க கொடுப்போம் நீர்மோர்! – அண்ணாமலை

Next Post

குரு பரிகாரக் கோயில்கள்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies