மே தினம் கொண்டாட்டம் ஏன்?
Sep 12, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மே தினம் கொண்டாட்டம் ஏன்?

Murugesan M by Murugesan M
Apr 30, 2024, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மே 1ம் தேதியான இன்று உலக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவது ஏன்? அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

19 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் பட்டனர். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘தொழிலாளர்கள் கூட்டமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பின் சார்பில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து 1886ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அன்றைய தினம் அமெரிக்கா முழுவதும் 3லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதும் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. தொழிற்சங்க தலைவர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

தொழிலாளர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல், 1890-ம் ஆண்டு அவர்கள் கோரிக்கையான 8 மணி நேர வேலைக்கு அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. இது தான் மே தினம் உருவான வரலாறு.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை கோரிக்கையை நினைவு கூறும் விதத்திலும், நாடு, இனம்,மொழி இவற்றைக் கடந்து, அமெரிக்காவில் நடந்து போராட்டத்தின் போது தொழிலாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் மே ஒன்றாம் தேதி உலகெங்கிலும் உழைப்பாளர்கள் நாளாக கொண்டாடப் படுகிறது. 1890ஆம் ஆண்டிலேயே சில நாடுகளில் உழைப்பாளர் நாள் கொண்டாடப்பட்டது.

‘இரண்டாம் உலகம் , என்ற பெயரில் சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு 1889-ல் பாரிஸ் மாநகரில் நடைபெற்றது.

அதில் சிகாகோ தொழிலாளர்கள் போராட்டத்தைப் போற்றும் வகையில் மே மாதம் ஒன்றாம் தேதியை உழைப்பாளர் நாளைக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை ரேமண்ட் லவிக்னே முன்மொழிந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

இதன் பிறகே உலக நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் அனைத்தும் இந்த நாளை உழைப்பாளர் தினமாக முறைப்படி கொண்டாடின.

இன்று உலகமெங்கும் ஏறத்தாழ 80 நாடுகளுக்கு மேல் மே ஆறாம் தேதியை உழைப்பாளர்கள் தினமாக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில், முதல் தொழிலாளர் தினம் 1923 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. தொழிலாளர் கிசான் கட்சிதான் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் மே தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

திருவல்லி கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி என்பவர் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்கார வேலர் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழிலாளர் கிசான் கட்சியின் தலைவரரும் சிறந்த சீர்திருத்த வாதியுமான சிங்காரவேலர் உயர்நீதிமன்றம் அருகே கடற்கரையில் மே தினத்தைக் கொடி ஏற்றி கொண்டாடினார்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் , அப்போதே பாரத நாடு விடுதலை அடைந்ததாக எண்ணி, இந்திய தேசியக் கொடி ஏற்றி , பின்னர் சிகப்பு வண்ணக் கொடி ஏற்றினார்.

சிங்காரவேலர் கோடி ஏற்றி மே தின உரை யாற்றிய இடத்தில் பிரபல சிற்பி தேவிபிரசாத் ராய் சௌத்ரியால் கலைவண்ணத்தில் உருவான உழைப்பாளர் சிலை 1956ம் ஆண்டு குடியரசு நாளில் காமராசரால் நிறுவப் பட்டது.

மே தினத்தைப் போற்றும் விதமாக முன்னாள் பிரதமர் வி.பி.சிங், அந்நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தார் .

இந்தியா விடுதலை அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே , ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற பெயரில் இந்தியாவின் முதல் தொழில் சங்கம் தொடங்கப் பட்டது.

தமிழ்த் தென்றல் என்று போற்றப்படும் திரு.வி.க, தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உரிய விதிமுறைகளுடன் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை 1918 ஏப்ரல் 27ம் தேதி சென்னையில் உருவாக்கினார். இந்தியாவில் தொழிலாளர்கள் உரிமைகள் காக்க தொடங்கப் பட்ட எல்லா தொழில் சங்கங்களுக்கும் இதுதான் முன்னோடி சங்கம்.

இப்படி இந்திய உழைப்பாளர்களுக்காக போராடிய முன்னோர்களை நினைவு கொள்வதோடு , அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

Tags: Why May Day Celebration?
Share
Tweet
SendShare
Previous Post

கோடையின் கொடுமை தணிக்க கொடுப்போம் நீர்மோர்! – அண்ணாமலை

Next Post

குரு பரிகாரக் கோயில்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies